Dec 13, 2012

காரியக்காரி!



குளிக்கிறாய் - ஆனால்
மஞ்சளுக்குப் பதிலாய் – என்
கவிதையைப் பூசுகிறாய்
மேனி மினுங்கட்டுமென்று!

குளித்ததும் கவிதையைச்
சுற்றிக்கொள்கிறாய்
உன் மேனியில்
சுகம் ஊறட்டுமென்று!

என் கவிதைதான் – உனக்குக்
காலைச் சாப்பாடு
உடம்பும் உள்ளமும்
இளமையாய் இருக்கட்டுமென்று!

வேலைக்குப் போகிறாய்
கதிரைக்குப் பதிலாய்
கவிதையில் சாய்கிறாய்
கட்டி அணைக்கட்டுமென்று!

மாலையில் வருகிறாய்
வழியில் பூச்சரம்
வாரிக் கொள்கிறாய்
வருவேன் மடியிலிருப்பேனென்று!

No comments:

Post a Comment