Dec 13, 2012

எனைப் பிரிந்து சென்றவளே.. 2


ட்டிலாயிற்று கடற்கரையாயிற்று
பொட்டலாயிற்று புல்வெளியாயிற்று
எங்குமே உனது முந்தானைதான்
எனது மரகதக் கம்பளம்.
கைக்குட்டையையும் கடதாசியையும் தேடுவானேன் - உன்
முந்தானை நுனியில் எல்லாமேயுண்டு.


ரைந்தாலும் பனியாகக் கரைவேன்
விழுந்தாலும் மழையாக விழுவேன்
உதிர்ந்தாலும் பூக்களாய் உதிர்வேன்
எரிந்தாலும் விளக்காக எரிவேன்
தேய்ந்தாலும் பிறையாகத் தேய்வேன்
நிறைந்தாலும் எல்லையொடு நிறைவேன்
மறைந்தாலும் முகிலாக மறைவேன்
குறைந்தாலும் மணல்நீராய்க் குறைவேன்
இரந்தாலும் அன்பையே இரப்பேன்
இறந்தாலும் உன் நினைவோடு இறப்பேன்!



No comments:

Post a Comment