Dec 28, 2012

சிறைச்சாலைச் செம்பருத்திகள்



அறிவும் இளமையும்
இனிமையும் இலட்சியமும்
இணைந்ததோரு
உலகம் உண்டென்றால்
மாணவர்களே!
உங்கள் இதயம்தான்
அது உலவும் அண்டவெளி!

நீங்கள் -
புத்தகங்களைச் சுமக்கும்
பார வண்டிகள் அல்லர்
பகுத்தறிவுப் பூங்காவில் மலர்ந்த
பாரிஜாதப் பூக்கள்.

நான் துள்ளித் திரிந்த காலத்தைத்
திரும்பிப் பார்க்க வைப்பவர்களே
பல்கலைக் கழகப்
படிக்கட்டுகளைப் பாய்ந்தேறுங்கள்
சட்டக் கல்லூரிச்
சறுக்கு மரங்களில்
சந்தனம் பூசுங்கள்!

அவசர உலகத்தின் பிரதிநிதிகளே,
ஆயுள் முழுவதும் கற்றாலும்
இளமைக்காலக் கல்விக்கு
இணையேதுமில்லை!

நீங்களோர் அதிசயம் மட்டுமல்ல
அரச இயந்திரத்தின்
அச்சாணிகளை உடைக்கும்
உந்து சக்திகள்!

சுதந்திரமடைந்த நாடுகள்
உங்கள் பங்கைச்
சொல்ல மறந்திருக்கலாம்
ஆனால்
அவற்றின் எழுச்சியின்
அத்திவாரமே நீங்கள்தான்,

நீங்கள் இணைந்திருக்கும்வரை
அரசியலார் ஆயுதங்கள்
இன, மொழி, மதம் எதுவும்
உங்களை
இடற வைக்கப்போவதில்லை!

அறிவுதான் உங்கள் இனம்
ஆற்றல்தான் உங்கள் மொழி
எழிச்சிதான் உங்கள் மதம்!

--- 0 ---

அன்று மொழி அழிப்பு
நேற்று இன அழிப்பு
இன்று அறிவழிப்பு!

அடக்குமுறையிலும் அராஜகத்திலும்
ஊறிப்போன அரசியலார்
தங்கள் சவப்பெட்டிக்குத்
தாங்களே ஆணி அடிக்கின்றார்!

மானிடத்தை மதிக்காத
மடையர்கள்
இராணுவ அரணிருந்தும்
உறங்க மறந்தார்கள்.

இனத்துவேஷ நெருப்பில்
குளிர் காயும் அரசியலார்
பிரித்தாளும் பனிமழையில்
புழுக்கம் போக்கப் பார்க்கின்றார்.

வெள்ளத்தின் மத்தியில்
நாவற்றி நிற்கிறார் நாடாள்வோர்
சொல்லுங்கள் மந்திரத்தை,
சிறைச்சாலைக் கதவுகள்
சுக்குநூறாகட்டும்!

மாணவர் உலகம்
எல்லையற்றது
மதக் கோட்பாடுகளால்
மாசுபடாதது
மொழி வேறுபாடுகளால்
வழி தடுமாறாதது
இனப் பாகுபாடுகளால்
இடர்ப் படாதது!

சிறைச்சாலைச் சுவர்களில்
புறநானூறு பாடுங்கள்!
கொழும்பில் ஆள்பவர்களின்
கொழுப்பை அடக்குங்கள்!

நீங்கள் -
காலியிலிருந்து
காங்கேசன்துறை வரை
புத்தளத்திலிருந்து
பொத்துவில் வரை
அறிவுப் பட்டறைகளில்
அடிவாங்கும் உலோகங்கள்!

ஆகவே -
தெரிந்து கொள்ளுங்கள்,
தென் திசைத் தோழர்கள்
தோள் கொடுப்பர் நிச்சயமாய்!
வெல்லுங்கள் அவர் நெஞ்சங்களை,
சொல்லுங்கள் நாமிதோ
சேர்ந்துவிட்டோமென்று!


சிறைச்சாலைச் செம்பருத்திகள்



அறிவும் இளமையும்
இனிமையும் இலட்சியமும்
இணைந்ததோரு
உலகம் உண்டென்றால்
மாணவர்களே!
உங்கள் இதயம்தான்
அது உலவும் அண்டவெளி!

நீங்கள் -
புத்தகங்களைச் சுமக்கும்
பார வண்டிகள் அல்லர்
பகுத்தறிவுப் பூங்காவில் மலர்ந்த
பாரிஜாதப் பூக்கள்.

நான் துள்ளித் திரிந்த காலத்தைத்
திரும்பிப் பார்க்க வைப்பவர்களே
பல்கலைக் கழகப்
படிக்கட்டுகளைப் பாய்ந்தேறுங்கள்
சட்டக் கல்லூரிச்
சறுக்கு மரங்களில்
சந்தனம் பூசுங்கள்!

அவசர உலகத்தின் பிரதிநிதிகளே,
ஆயுள் முழுவதும் கற்றாலும்
இளமைக்காலக் கல்விக்கு
இணையேதுமில்லை!

நீங்களோர் அதிசயம் மட்டுமல்ல
அரச இயந்திரத்தின்
அச்சாணிகளை உடைக்கும்
உந்து சக்திகள்!

சுதந்திரமடைந்த நாடுகள்
உங்கள் பங்கைச்
சொல்ல மறந்திருக்கலாம்
ஆனால்
அவற்றின் எழுச்சியின்
அத்திவாரமே நீங்கள்தான்,

நீங்கள் இணைந்திருக்கும்வரை
அரசியலார் ஆயுதங்கள்
இன, மொழி, மதம் எதுவும்
உங்களை
இடற வைக்கப்போவதில்லை!

அறிவுதான் உங்கள் இனம்
ஆற்றல்தான் உங்கள் மொழி
எழிச்சிதான் உங்கள் மதம்!

--- 0 ---

அன்று மொழி அழிப்பு
நேற்று இன அழிப்பு
இன்று அறிவழிப்பு!

அடக்குமுறையிலும் அராஜகத்திலும்
ஊறிப்போன அரசியலார்
தங்கள் சவப்பெட்டிக்குத்
தாங்களே ஆணி அடிக்கின்றார்!

மானிடத்தை மதிக்காத
மடையர்கள்
இராணுவ அரணிருந்தும்
உறங்க மறந்தார்கள்.

இனத்துவேஷ நெருப்பில்
குளிர் காயும் அரசியலார்
பிரித்தாளும் பனிமழையில்
புழுக்கம் போக்கப் பார்க்கின்றார்.

வெள்ளத்தின் மத்தியில்
நாவற்றி நிற்கிறார் நாடாள்வோர்
சொல்லுங்கள் மந்திரத்தை,
சிறைச்சாலைக் கதவுகள்
சுக்குநூறாகட்டும்!

மாணவர் உலகம்
எல்லையற்றது
மதக் கோட்பாடுகளால்
மாசுபடாதது
மொழி வேறுபாடுகளால்
வழி தடுமாறாதது
இனப் பாகுபாடுகளால்
இடர்ப் படாதது!

சிறைச்சாலைச் சுவர்களில்
புறநானூறு பாடுங்கள்!
கொழும்பில் ஆள்பவர்களின்
கொழுப்பை அடக்குங்கள்!

நீங்கள் -
காலியிலிருந்து
காங்கேசன்துறை வரை
புத்தளத்திலிருந்து
பொத்துவில் வரை
அறிவுப் பட்டறைகளில்
அடிவாங்கும் உலோகங்கள்!

ஆகவே -
தெரிந்து கொள்ளுங்கள்,
தென் திசைத் தோழர்கள்
தோள் கொடுப்பர் நிச்சயமாய்!
வெல்லுங்கள் அவர் நெஞ்சங்களை,
சொல்லுங்கள் நாமிதோ
சேர்ந்துவிட்டோமென்று!


21 – 12 – 2012



ருபத்தியோராம் திகதி!
இரயில் நிலையம்
ஒளியில் திளைக்கிறது.
கூட்டத்தில் ஒருவனாய் நான்...

விறைத்துப்போன மேனி,
உறைந்துபோன குருதி,
பழகிப்போன காலை!
எல்லாமாய் நூறு பேர்,
கூட்டத்தில் ஒருவனாய் நான்...

உத்தியோகத்து எருமை மாடுகள்,
பல்கலைக் கழகப் பைத்தியங்கள்,
பங்குக் கம்பெனி பண முதலைகள்,
பள்ளிக்கூடத்துப் பயம் அறியாததுகள்...
இப்போது
என்னோடு இருநூறு பேர்.
கூட்டத்தில் ஒருவனாய் நான்...

பயணிகள் முகங்களில்
பயம் கலந்த புன்னகை
நன்றாய்த் தெரியும் இவர்கள்
குளிரால் நடுங்கவில்லை!

இரயில் நிலையம்
வழக்கம்போல்
ஒளியில் திளைக்கிறது.
இருபத்தோராம் திகதி பற்றி
எதுவுமே அறியாதமாதிரி!
கூட்டத்தில் ஒருவனாய் நான்...

தூரத்தில் –
ரயிலொன்று வருகிறது
விளக்கில் நம்பிக்கை
வேகத்தில் உறுதி.

வந்த ரயில்
வழுக்கியபடி நிற்கிறது.
வந்திருந்த கூட்டமெல்லாம்
ஒழுங்காய் அமைதியாய்
இடிபடாமல் ஏறுகிறது.
இரண்டு நிமிடங்களில்
இந்த நாளை நோக்கிப்
பயணிக்கிறது!

இப்போது
எல்லாரும் சிரிக்கிறார்கள்!
இந்த நாள்
எவ்வளவு இனிமையானது!

மனிதன்
காலண்டரைக் கண்டுபிடித்தது
காலத்தைக் கணக்கிடத்தான்.
காலண்டர் மனிதரின்
காலனாக வருவதற்கல்ல!

21 – 12 – 2012



ருபத்தியோராம் திகதி!
இரயில் நிலையம்
ஒளியில் திளைக்கிறது.
கூட்டத்தில் ஒருவனாய் நான்...

விறைத்துப்போன மேனி,
உறைந்துபோன குருதி,
பழகிப்போன காலை!
எல்லாமாய் நூறு பேர்,
கூட்டத்தில் ஒருவனாய் நான்...

உத்தியோகத்து எருமை மாடுகள்,
பல்கலைக் கழகப் பைத்தியங்கள்,
பங்குக் கம்பெனி பண முதலைகள்,
பள்ளிக்கூடத்துப் பயம் அறியாததுகள்...
இப்போது
என்னோடு இருநூறு பேர்.
கூட்டத்தில் ஒருவனாய் நான்...

பயணிகள் முகங்களில்
பயம் கலந்த புன்னகை
நன்றாய்த் தெரியும் இவர்கள்
குளிரால் நடுங்கவில்லை!

இரயில் நிலையம்
வழக்கம்போல்
ஒளியில் திளைக்கிறது.
இருபத்தோராம் திகதி பற்றி
எதுவுமே அறியாதமாதிரி!
கூட்டத்தில் ஒருவனாய் நான்...

தூரத்தில் –
ரயிலொன்று வருகிறது
விளக்கில் நம்பிக்கை
வேகத்தில் உறுதி.

வந்த ரயில்
வழுக்கியபடி நிற்கிறது.
வந்திருந்த கூட்டமெல்லாம்
ஒழுங்காய் அமைதியாய்
இடிபடாமல் ஏறுகிறது.
இரண்டு நிமிடங்களில்
இந்த நாளை நோக்கிப்
பயணிக்கிறது!

இப்போது
எல்லாரும் சிரிக்கிறார்கள்!
இந்த நாள்
எவ்வளவு இனிமையானது!

மனிதன்
காலண்டரைக் கண்டுபிடித்தது
காலத்தைக் கணக்கிடத்தான்.
காலண்டர் மனிதரின்
காலனாக வருவதற்கல்ல!

தசாவதாரம்





முட்டாள்கள் வெளியிட்ட
கவிதைத் தொகுப்புக்கு
முகவுரை எழுதியவன் நான்.

காணாமற் போனோர் சங்கத்தைக்
கட்டி எழுப்பியவனும் நான்தான்.

காற்றுக்கும் மழைக்கும்
பிறந்தவன் நான் ஆதலால்
அடக்கமாய் இருக்கும்போதுதான்
அழகாய் இருக்கிறேன்.

இறந்தவர் பட்டியலில்
என் பெயரைக் காணலாம்
வாக்காளர் பட்டியலிலும்
வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

முகாம் மாகாணத்தில்
பாழ்ப்பாணம் என்
பிறந்த இடம்.

பட்டினி இருப்பதுதான்
என் பொழுதுபோக்கு
பாடையில் கிடக்கும்போதும்
பாடிக் கொண்டிருப்பேன்.

பல்கலைக்கழகம் போகாமலே
பட்டங்கள் எடுத்தவன் நான்.
மிருகங்களின் பெயர்களைத்தான்
முதற்பெயராய்க் கொண்டவன் நான் .

அலுகோசுகள்* சங்கத்தின்
ஆயுட்கால உறுப்பினன் நான்
சுருக்குப்போடும் காரியத்தைச்
சனாதிபதி திருடிவிட்டான்.

பத்துத் தடவைகள்
இரத்தம் கொடுத்திருக்கிறேன்
இரண்டு முறைகள் மட்டும்
இருதய தானம் செய்திருக்கிறேன்.

மூன்றாம் மாடியிலிருந்து
முட்டி விழுத்தினார்கள்
மூன்றாம் நாளே
எழுந்து வந்துவிட்டேன்.

வெலிக்கடை வேலியில்
வெட்டிக் காயப் போட்டார்கள்
விடுதலைக்கு முன்
வீட்டுக்கு வந்துவிட்டேன்.

முகாமுக்குள் வைத்து
மூச்சுத் திணற நெரித்து
மாண்ட என் உடலை
மதவுக்குள் எறிந்தார்கள்
விடியற் காலை வேளை
வழக்கம்போல் எழுந்துவிட்டேன்.

தெருவில் நிற்கிற
தேசிய உணர்வைத்
திண்ணைக்கு வரவழைப்பேன்.

ஆயுத்தை எறிந்துவிட்டு
அன்பை எடுத்துக்கொள்வேன்
ஐநாவை அழைப்பதைவிட்டு
அயலவரை அழைத்திடுவேன்.

மக்களாட்சி மலரும்வரை நான்
மரணிக்கப் போவதில்லை!


*அலுகோசு:- சிறையில் மரணதண்டனைக் கைதிகளைத் தூக்குப்போடுபவர்.

தசாவதாரம்





முட்டாள்கள் வெளியிட்ட
கவிதைத் தொகுப்புக்கு
முகவுரை எழுதியவன் நான்.

காணாமற் போனோர் சங்கத்தைக்
கட்டி எழுப்பியவனும் நான்தான்.

காற்றுக்கும் மழைக்கும்
பிறந்தவன் நான் ஆதலால்
அடக்கமாய் இருக்கும்போதுதான்
அழகாய் இருக்கிறேன்.

இறந்தவர் பட்டியலில்
என் பெயரைக் காணலாம்
வாக்காளர் பட்டியலிலும்
வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

முகாம் மாகாணத்தில்
பாழ்ப்பாணம் என்
பிறந்த இடம்.

பட்டினி இருப்பதுதான்
என் பொழுதுபோக்கு
பாடையில் கிடக்கும்போதும்
பாடிக் கொண்டிருப்பேன்.

பல்கலைக்கழகம் போகாமலே
பட்டங்கள் எடுத்தவன் நான்.
மிருகங்களின் பெயர்களைத்தான்
முதற்பெயராய்க் கொண்டவன் நான் .

அலுகோசுகள்* சங்கத்தின்
ஆயுட்கால உறுப்பினன் நான்
சுருக்குப்போடும் காரியத்தைச்
சனாதிபதி திருடிவிட்டான்.

பத்துத் தடவைகள்
இரத்தம் கொடுத்திருக்கிறேன்
இரண்டு முறைகள் மட்டும்
இருதய தானம் செய்திருக்கிறேன்.

மூன்றாம் மாடியிலிருந்து
முட்டி விழுத்தினார்கள்
மூன்றாம் நாளே
எழுந்து வந்துவிட்டேன்.

வெலிக்கடை வேலியில்
வெட்டிக் காயப் போட்டார்கள்
விடுதலைக்கு முன்
வீட்டுக்கு வந்துவிட்டேன்.

முகாமுக்குள் வைத்து
மூச்சுத் திணற நெரித்து
மாண்ட என் உடலை
மதவுக்குள் எறிந்தார்கள்
விடியற் காலை வேளை
வழக்கம்போல் எழுந்துவிட்டேன்.

தெருவில் நிற்கிற
தேசிய உணர்வைத்
திண்ணைக்கு வரவழைப்பேன்.

ஆயுத்தை எறிந்துவிட்டு
அன்பை எடுத்துக்கொள்வேன்
ஐநாவை அழைப்பதைவிட்டு
அயலவரை அழைத்திடுவேன்.

மக்களாட்சி மலரும்வரை நான்
மரணிக்கப் போவதில்லை!


*அலுகோசு:- சிறையில் மரணதண்டனைக் கைதிகளைத் தூக்குப்போடுபவர்.

Dec 16, 2012

சிறந்தது கேட்கின்..



வாழும் நாடுகளில் – உன்னை
வாழவிடும் நாடுதான்
சிறந்த நாடு.

பேசும் மொழிகளில் – உன்னைப்
பண்படுத்தும் மொழிதான்
சிறந்த மொழி.

பாடும் பாடல்களில் – உனது
பாலர் வகுப்புப் பாடல்தான்
சிறந்த பாடல்.

பேசவந்த வார்த்தைகளில் – நீங்கள்
பேசாத வார்த்தைதான்
சிறந்த வார்த்தை.

கூடும் கூட்டங்களில் – உங்களில்
குறை காணாத கூட்டம்தான்
சிறந்த கூட்டம்.

நாடும் நண்பர்களில் – உங்களிடம்
நல்லவற்றைக் காண்பவர்தான்
சிறந்த நண்பர்.

செய்யும் தொழில்களில் – நீங்கள்
சேவையெனக் காண்பதுதான்
சிறந்த தொழில்.

செல்லும் பாதைகளில் – நீங்கள்
சேரிடம் அறிந்த பாதைதான்
சிறந்த பாதை.

உண்ணும் உணவுகளில் – உனக்கு
அளவான உணவுதான்
சிறந்த உணவு.

வாழ்க்கைத் துணைகளில் – உங்கள்
வலது கையாய் இருப்பவர்தான்
சிறந்த துணை.

சிறந்தது கேட்கின்..



வாழும் நாடுகளில் – உன்னை
வாழவிடும் நாடுதான்
சிறந்த நாடு.

பேசும் மொழிகளில் – உன்னைப்
பண்படுத்தும் மொழிதான்
சிறந்த மொழி.

பாடும் பாடல்களில் – உனது
பாலர் வகுப்புப் பாடல்தான்
சிறந்த பாடல்.

பேசவந்த வார்த்தைகளில் – நீங்கள்
பேசாத வார்த்தைதான்
சிறந்த வார்த்தை.

கூடும் கூட்டங்களில் – உங்களில்
குறை காணாத கூட்டம்தான்
சிறந்த கூட்டம்.

நாடும் நண்பர்களில் – உங்களிடம்
நல்லவற்றைக் காண்பவர்தான்
சிறந்த நண்பர்.

செய்யும் தொழில்களில் – நீங்கள்
சேவையெனக் காண்பதுதான்
சிறந்த தொழில்.

செல்லும் பாதைகளில் – நீங்கள்
சேரிடம் அறிந்த பாதைதான்
சிறந்த பாதை.

உண்ணும் உணவுகளில் – உனக்கு
அளவான உணவுதான்
சிறந்த உணவு.

வாழ்க்கைத் துணைகளில் – உங்கள்
வலது கையாய் இருப்பவர்தான்
சிறந்த துணை.