Dec 13, 2012

அம்மா மெத்தப் பசிக்கிறதே!


ம்மா மெத்தப் பசிக்கிறதே
அப்பம் இருந்தால் இப்போ தா
அப்பம் இன்றேல் முத்தம் தா
அதுவே எனக்குப் போதுமம்மா!

ண்ணீர் இருந்தால் தாருமம்மா
தாகம் உடனே தீருமம்மா
தலையைக் கோதி விட்டுவிடும்
தயவாய் என்முகம் திருத்திவிடும்.

ள்ளிக்குப் போகும் நேரமிது
பாலர்கள் போவார் பாதையிலே
புத்தகம் பென்சில் நானெடுப்பேன்
பக்கத்தில் இருந்தே படித்திடுவேன்.

வானமே எங்கள் கூரையம்மா
வெண்மணலே எங்கள் கம்பளமாம்
வேலிக்கு வெளியே வேறுலகம்
வேதனை என்பதே நம்முலகம்.

ருட்டினில் வாழ்ந்தே பழகிவிட்டோம்
இருப்பதை உண்டே பசி தீர்ந்தோம்
நாளும் ஒருநாள் விடியுமம்மா
நாங்களும் மனிதர் ஆவோமம்மா! 

No comments:

Post a Comment