Dec 13, 2012

எனைப் பிரிந்து சென்றவளே..3


டியில் தலை வைத்தால்
முடிகோதி இமைகோதி
முத்த மழை பெய்து
முகமெல்லாம் நனைத்திடுவாய்.

கடற்கரையில் கடலை வாங்கக்
காசில்லை என்றதற்கு
கழுத்துச் சங்கிலியைக் கழற்றித்
தந்தவளே நீதானே!

காசில்லாதவனென்று
கணக்கிலேடுக்க மறுத்தாரே – நீ
காணாமற்போன பின்னால்
காசெல்லாம் குவிந்தது
உன் படம் அதில்
இல்லாமல் போனதால்
செல்லாமல் போனது.

இரணைமடுக் குளத்தில்
சுழிகள் மட்டுந்தான்
உன் வீட்டிலோ
சுழிகளோடு முதலைகளும்.

கதவைத் திறந்து வந்தவனைக்
கண்டதுண்டமாய் வெட்டி
கோடிப்புறம் புதைத்தார்கள் – என்
கண்கள் மட்டும் எப்படியோ தப்பி – உன்
கட்டிலின்கீழ் ஒழித்துக்கொண்டன.

கீரிமலைக் கடலோரம்
கைகோர்த்து நிற்கையிலே
சூனாமி எங்கே
சூல் கலைந்தா போயிற்று?

குறிஞ்சிக் குமரனிடம்
கால் நோக நடக்கையிலே
குன்றின் மேலிருந்து
குதிக்காமலேன் வந்தோம்?

ஒரு அதிகாலை விமானத்தில்
ஏறிச்சென்றதை அறிவேன்
ஒருகோடி மைலுக்கப்பால் நீ
ஒழிந்து கொண்டதை அறியேன்.

நீயேறிய விமானம் – என்
நினைவுகளின் பாரத்தால்
நிமிர்ந்தேழவே மறுத்திருக்கும்
நீ நடந்த பாதையில்
நீர்கோர்த்த புற்றரை
நெஞ்சார அழுதிருக்கும்

சந்திரனில் இருப்பாயானால்
சத்தியமாய் வந்து சேர்வேன்
சொந்தங்களின் காவலென்றால்
சோர்ந்து நடைப் பிணமாவேன்!      

No comments:

Post a Comment