Aug 31, 2012

கண்மணி

ஒவ்வொரு நாட்காலையும் அவளை நான் காணும்போது அப்போதுதான் துயிலெழுந்து முகம் திருத்தி வந்தவள்போன்ற பொலிவுடன் தோன்றுவாள். அவளைக் கண்டதும் நான் கேட்கும் முதல் கேள்வி “How are you?” அதற்கு அவளிட மிருந்து உடனே பதில் வரும்: “I am fine” கூடவே அவள் முகத்தில் ஒரு புன்னகையோடு கலந்த மலர்ச்சி.

ரொராண்டோ நகரின் யூனிவர்சிடி அவனியு. இருமருங்கும் அடுக்கடுக்காய் விண்ணைமுட்டும் கட்டிடங்கள். அவற்றினூடாகப் புகுந்து விளையாடும் மென்மையான தென்றல். முகத்திலடிக்காத காலை வெயில். இந்த வேளையில் அலுவலகத்துக்கு நடைபயில்வதே ஒரு அலாதியான அனுபவம்.

யூனிவர்சிடி அவெனியு/கிங் வீதி சந்திப்பின் வடமேற்கு மூலையில் அவளை நான் முதலில் சந்தித்தேன். அதன் பிறகு நான் நேரத்தோடு அலுவலகத்துக்குப்போன ஒவ்வொரு காலையும் அவளை நான் அங்கே சந்திக்கத் தவறியதில்லை. அந்த மூலையில் நெடு நேரம் எனக்காகக் காத்திருந்தவள் போல் அவள் நிற்பாள். கையில் தூக்கமுடியாத் சுமை. ஆயினும் துவண்டு போகாமல் நடைபாதையில் விரைந்து கொண்டிருப்போர் ஒவ்வொருவரையும் ஒரு கணத்துக்குள் சந்தித்து அவர்களிடம் தன்கையிலுள்ள இலவச Metro பத்திரிகையைத் திணித்துவிடும் அழகையும் தொழில் நுட்பத்தையும் பார்த்துக் கொண்டேயிருக்கலாம்.

இந்த இரக்கமற்ற நகரச்சூழலில் இவள் ஏன் வந்து மாட்டிக்கொண்டாள் என்றுதான் நான் முதலில் நினைத்தேன். இவ்வளவுக்கும் அவளுக்குப் பத்துவயது இருக்கலாம். முழுக்க முழுக்க யாழ்ப்பாணத்துப் பெண். வட்டவடிவமான கண்கள். நடுவே கரிய விழிகள். எவரையும் கவர்ந்துவிடக்கூடிய காந்த சக்தியைத் தேக்கிவைதிருக்கும் அவள் கண்களை நான் முதலில் சந்தித்தபோது கொஞ்சம் அதிந்துதான்போனேன். அவளுக்கு நான் வைத்த பெயர் கண்மணி

இலவசப்பத்திரிகையை வினியோகிப்பதற்கு அதிகம் திறமை தேவையில்லையென்று நினைப்பீர்கள். இது சோம்பேறிகள் நடமாடும் சந்தியல்ல. எல்லாரும் அவசர உலகத்தின் பிரதிநிதிகள். இன்று வண்டியிலிருந்து இறங்கிய கையிருப்பு முழுவதையும் அவர்கள் கையில் திணித்துவிடவேண்டும். அதுவும் காலை பத்து மணிக்குள். கண்மணியின் அன்றாடச் செயற்பாடு அல்லது தொழில் வாழ்க்கை மிகச்சிறியது. ஆயினும் அதில் அவள் அளப்பற்ற வெற்றியும் மகிழ்ச்சியும் அடைந்தவள் போலவே எனக்குத் தோன்றுவாள். 

கண்மணி சாதாரண குடும்பத்தில் பிறந்த ஒரு சிறுமி. அவள் ஒரு சிலர் போலப் பெயர் பெற்றவளில்லை. சிறிய பணியாக இருந்தபோதும் அவள் அதனை ஆற்றிய அழகு என்னை ஆழமாய்ச் சிந்திக்கவைத்தது.

நாம் செய்யும் தொழில் மிகவும் எளிமையானதாக இருக்கலாம், உடல் ரீதியானதாக இருக்கலாம். உதாரணமாக, அன்றாடக் கூலி வேலைக்குப் போகிறவராகவோ குப்பை அள்ளுகிறவராகவோ இருக்கலாம். ஆயினும் நாம் செய்யும் எந்தத் தொழிலையும் நாம் வாழும் உலகை மேம்படச் செய்யும் ஒரு சந்தர்ப்பமாகக் கருதிச் செய்வோமானால் ஒரு இலட்சியத்தை நிறைவேற்றவெண்ணி அதனைச் செய்வதுபோன்ற உணர்வுடையவராகவும் சேவை மனப்பான்மை உடையவராகவும் எங்களை உயர்த்திக் கொள்வோம்.

மகாத்மா காந்தி நன்கு அவதானித்து அறிந்தபின்னர்தான் கூறினார்: நீங்கள் செய்யப்போகும் பணி முக்கியத்துவம் வாய்ந்ததா இல்லையா என்பது அவசியமில்லை, உங்களால் முடிந்த அளவு அதனைச் சிறப்பாகச் செய்யுங்கள் அதை உங்கள் மிக முக்கியமான பணியெனக் கருதி உங்கள் முழு அறிவையும் கவனத்தையும் அதன்மீது செலுத்துங்கள். அது சிறிய பணியாக இருக்கலாம் ஆனால் அதனை எப்படி ஆற்றினீர்கள் என்பதிலிருந்துதான் நீங்கள் மதிப்பிடப்படுவீர்கள்.

சிறுவர்கள் பலரை நான் சந்தித்திருக்கிறேன். அன்றாடம் தெருவோரங்களிலும் கடைத் தெருக்களிலும் விளையாட்டு மைதானங்களிலும் நூலகங்களிலும் அவர்களை நன்கு அவதானித்திருக்கிறேன். அவர்களில் பலர் எனது நண்பர்களாக இருக்கிறார்கள். அடுத்தவீட்டு மூன்று வயது லியாம் என்னைப் பெயர் சொல்லிக் கூப்பிடுவான். நடைபாதையில் கண்டதும் "Give me a hug" என்று நான் சொன்னதும் ஓடிவந்து கட்டி அணைப்பான். அவன் கையில் எப்போதும் இருக்கும் ஒரு விளையாட்டுக் கார். ஒருமுறை அதற்கு ஐந்து மில்லியன் டாலர்கள் தருவதாகச் சொன்னேன் ஆனால் அவன் அதற்குச் சம்மதிக்கவில்லை. அடுத்தமுறை அவனை நான் கண்டபோது ஓடிவந்து தன் விளையாட்டுக் காரை என்முன்னே நீட்டினான். அப்போது அவன் முகத்தில் படர்ந்த பெருமிதம் அளப்பரியது.

சிறுவர்களே எனது ஹீரோக்கள். முன்பின் தெரியாதவர் மீதும் உடனே அன்பைப் பொழியும் பரந்த மனம்;  இன்னொருவர் மீது ஒருகணம் கோபப்பட்டாலும் அடுத்தகணமே அதை மறந்துவிடும் மனப்பக்குவம்; பொறாமை என்பது என்னவென்பதே தெரியாத பேருள்ளம்; மற்றவர்களுக்காக இரங்கும் இதயம்; கூடிப்பழகுவதிலுள்ள பேரார்வம் இவையெல்லாம் அவர்களே எனக்கு ஆசான்கள் என எண்ணவைக்கின்றன.

கண்மணி அண்மையில் கிடைத்த இன்னோரு நண்பி.  கோடை மறைந்து இலையுதிர் காலம் துவங்கியதும் அவளை வழக்கமான சந்தியில் காணமுடியாமற் போய்விட்டது. ஆயினும் இன்றும் அவளை நான் மறவாதிருப்பதற்குக் காரணம் அவளின் காந்தக் கண்களில் நான் கட்டுப்பட்டதனாலல்ல அந்தக் கண்களில் தேங்கி நின்ற மனவுறுதியும் செய்வதைத் திருத்தமாகச் செய்வதில் காட்டிய அக்கறையும் அந்நியர்களையும் அறிந்தவர்கள்போல் நடத்திய நேர்த்தியும் எனக்கு நிறையப் பாடம் புகட்டியதனாலாகும்.

கண்மணி போன்றோரே இன்று நமக்கு உந்துசக்தியாக இருக்கிறார்கள். இவள் போன்றோரே இந்தக் குழப்பம் மிகுந்த உலகத்தில் தலைமைத்துவத்துக்கு எமக்குத் தேவைப்படுகிறார்கள்.

கண்மணி

ஒவ்வொரு நாட்காலையும் அவளை நான் காணும்போது அப்போதுதான் துயிலெழுந்து முகம் திருத்தி வந்தவள்போன்ற பொலிவுடன் தோன்றுவாள். அவளைக் கண்டதும் நான் கேட்கும் முதல் கேள்வி “How are you?” அதற்கு அவளிட மிருந்து உடனே பதில் வரும்: “I am fine” கூடவே அவள் முகத்தில் ஒரு புன்னகையோடு கலந்த மலர்ச்சி.

ரொராண்டோ நகரின் யூனிவர்சிடி அவனியு. இருமருங்கும் அடுக்கடுக்காய் விண்ணைமுட்டும் கட்டிடங்கள். அவற்றினூடாகப் புகுந்து விளையாடும் மென்மையான தென்றல். முகத்திலடிக்காத காலை வெயில். இந்த வேளையில் அலுவலகத்துக்கு நடைபயில்வதே ஒரு அலாதியான அனுபவம்.

யூனிவர்சிடி அவெனியு/கிங் வீதி சந்திப்பின் வடமேற்கு மூலையில் அவளை நான் முதலில் சந்தித்தேன். அதன் பிறகு நான் நேரத்தோடு அலுவலகத்துக்குப்போன ஒவ்வொரு காலையும் அவளை நான் அங்கே சந்திக்கத் தவறியதில்லை. அந்த மூலையில் நெடு நேரம் எனக்காகக் காத்திருந்தவள் போல் அவள் நிற்பாள். கையில் தூக்கமுடியாத் சுமை. ஆயினும் துவண்டு போகாமல் நடைபாதையில் விரைந்து கொண்டிருப்போர் ஒவ்வொருவரையும் ஒரு கணத்துக்குள் சந்தித்து அவர்களிடம் தன்கையிலுள்ள இலவச Metro பத்திரிகையைத் திணித்துவிடும் அழகையும் தொழில் நுட்பத்தையும் பார்த்துக் கொண்டேயிருக்கலாம்.

இந்த இரக்கமற்ற நகரச்சூழலில் இவள் ஏன் வந்து மாட்டிக்கொண்டாள் என்றுதான் நான் முதலில் நினைத்தேன். இவ்வளவுக்கும் அவளுக்குப் பத்துவயது இருக்கலாம். முழுக்க முழுக்க யாழ்ப்பாணத்துப் பெண். வட்டவடிவமான கண்கள். நடுவே கரிய விழிகள். எவரையும் கவர்ந்துவிடக்கூடிய காந்த சக்தியைத் தேக்கிவைதிருக்கும் அவள் கண்களை நான் முதலில் சந்தித்தபோது கொஞ்சம் அதிந்துதான்போனேன். அவளுக்கு நான் வைத்த பெயர் கண்மணி

இலவசப்பத்திரிகையை வினியோகிப்பதற்கு அதிகம் திறமை தேவையில்லையென்று நினைப்பீர்கள். இது சோம்பேறிகள் நடமாடும் சந்தியல்ல. எல்லாரும் அவசர உலகத்தின் பிரதிநிதிகள். இன்று வண்டியிலிருந்து இறங்கிய கையிருப்பு முழுவதையும் அவர்கள் கையில் திணித்துவிடவேண்டும். அதுவும் காலை பத்து மணிக்குள். கண்மணியின் அன்றாடச் செயற்பாடு அல்லது தொழில் வாழ்க்கை மிகச்சிறியது. ஆயினும் அதில் அவள் அளப்பற்ற வெற்றியும் மகிழ்ச்சியும் அடைந்தவள் போலவே எனக்குத் தோன்றுவாள். 

கண்மணி சாதாரண குடும்பத்தில் பிறந்த ஒரு சிறுமி. அவள் ஒரு சிலர் போலப் பெயர் பெற்றவளில்லை. சிறிய பணியாக இருந்தபோதும் அவள் அதனை ஆற்றிய அழகு என்னை ஆழமாய்ச் சிந்திக்கவைத்தது.

நாம் செய்யும் தொழில் மிகவும் எளிமையானதாக இருக்கலாம், உடல் ரீதியானதாக இருக்கலாம். உதாரணமாக, அன்றாடக் கூலி வேலைக்குப் போகிறவராகவோ குப்பை அள்ளுகிறவராகவோ இருக்கலாம். ஆயினும் நாம் செய்யும் எந்தத் தொழிலையும் நாம் வாழும் உலகை மேம்படச் செய்யும் ஒரு சந்தர்ப்பமாகக் கருதிச் செய்வோமானால் ஒரு இலட்சியத்தை நிறைவேற்றவெண்ணி அதனைச் செய்வதுபோன்ற உணர்வுடையவராகவும் சேவை மனப்பான்மை உடையவராகவும் எங்களை உயர்த்திக் கொள்வோம்.

மகாத்மா காந்தி நன்கு அவதானித்து அறிந்தபின்னர்தான் கூறினார்: நீங்கள் செய்யப்போகும் பணி முக்கியத்துவம் வாய்ந்ததா இல்லையா என்பது அவசியமில்லை, உங்களால் முடிந்த அளவு அதனைச் சிறப்பாகச் செய்யுங்கள் அதை உங்கள் மிக முக்கியமான பணியெனக் கருதி உங்கள் முழு அறிவையும் கவனத்தையும் அதன்மீது செலுத்துங்கள். அது சிறிய பணியாக இருக்கலாம் ஆனால் அதனை எப்படி ஆற்றினீர்கள் என்பதிலிருந்துதான் நீங்கள் மதிப்பிடப்படுவீர்கள்.

சிறுவர்கள் பலரை நான் சந்தித்திருக்கிறேன். அன்றாடம் தெருவோரங்களிலும் கடைத் தெருக்களிலும் விளையாட்டு மைதானங்களிலும் நூலகங்களிலும் அவர்களை நன்கு அவதானித்திருக்கிறேன். அவர்களில் பலர் எனது நண்பர்களாக இருக்கிறார்கள். அடுத்தவீட்டு மூன்று வயது லியாம் என்னைப் பெயர் சொல்லிக் கூப்பிடுவான். நடைபாதையில் கண்டதும் "Give me a hug" என்று நான் சொன்னதும் ஓடிவந்து கட்டி அணைப்பான். அவன் கையில் எப்போதும் இருக்கும் ஒரு விளையாட்டுக் கார். ஒருமுறை அதற்கு ஐந்து மில்லியன் டாலர்கள் தருவதாகச் சொன்னேன் ஆனால் அவன் அதற்குச் சம்மதிக்கவில்லை. அடுத்தமுறை அவனை நான் கண்டபோது ஓடிவந்து தன் விளையாட்டுக் காரை என்முன்னே நீட்டினான். அப்போது அவன் முகத்தில் படர்ந்த பெருமிதம் அளப்பரியது.

சிறுவர்களே எனது ஹீரோக்கள். முன்பின் தெரியாதவர் மீதும் உடனே அன்பைப் பொழியும் பரந்த மனம்;  இன்னொருவர் மீது ஒருகணம் கோபப்பட்டாலும் அடுத்தகணமே அதை மறந்துவிடும் மனப்பக்குவம்; பொறாமை என்பது என்னவென்பதே தெரியாத பேருள்ளம்; மற்றவர்களுக்காக இரங்கும் இதயம்; கூடிப்பழகுவதிலுள்ள பேரார்வம் இவையெல்லாம் அவர்களே எனக்கு ஆசான்கள் என எண்ணவைக்கின்றன.

கண்மணி அண்மையில் கிடைத்த இன்னோரு நண்பி.  கோடை மறைந்து இலையுதிர் காலம் துவங்கியதும் அவளை வழக்கமான சந்தியில் காணமுடியாமற் போய்விட்டது. ஆயினும் இன்றும் அவளை நான் மறவாதிருப்பதற்குக் காரணம் அவளின் காந்தக் கண்களில் நான் கட்டுப்பட்டதனாலல்ல அந்தக் கண்களில் தேங்கி நின்ற மனவுறுதியும் செய்வதைத் திருத்தமாகச் செய்வதில் காட்டிய அக்கறையும் அந்நியர்களையும் அறிந்தவர்கள்போல் நடத்திய நேர்த்தியும் எனக்கு நிறையப் பாடம் புகட்டியதனாலாகும்.

கண்மணி போன்றோரே இன்று நமக்கு உந்துசக்தியாக இருக்கிறார்கள். இவள் போன்றோரே இந்தக் குழப்பம் மிகுந்த உலகத்தில் தலைமைத்துவத்துக்கு எமக்குத் தேவைப்படுகிறார்கள்.

Aug 22, 2012

சட்டம்தன் வழிச்செல்லல் கடன்


எங்கள் புலோலிப் பக்கத்துத் துரைராசாவைப் போயும் போயும் முல்லைத்தீவில் வைத்துச் சந்திப்பேனென்று நான் கனவிலும் கருதவில்லை.  அதுவும் கடைத்தெருவிலோ அல்லது அவர் வழக்கமாக இழுத்தடிக்கப்படும் கோட்டடியிலோ அல்ல.  ஒரு அந்திப்பொழுதில் என் சட்ட அலுவலகத் திண்ணையில் திடீரென வந்து நின்றார்.  கையில் அரிவாளோடு இரத்தம் சொட்டச் சொட்ட ஒருவர் உங்கள் வீட்டு வாசல்படியில் நடுச்சாமத்தில் வந்து நின்றால் எப்படியிருக்கும் உங்களுக்கு?  கிட்டத்தட்ட அதே நிலையில்தான் நான் இருந்தேன்.

பருத்தித்துறை வீதிகளில் தடக்கிவிழுந்தால் ஒரு சட்டத்தரணியின் மேல்தான் விழவேண்டிவரும். அவர்கள் நாவற்பழம்போல் அவ்வளவுக்கு அங்கே மலிவு. தங்கள் கடை வாசலில் நின்றுகொண்டு தெருவில் வருவோர் போவோரையெல்லாம் வாங்கோ, வாங்கோ என்று கூவி அழைக்கும் நகை வியாபாரிகள் எங்களூர்ச் சட்டத்தரணிகளுக்கு முன்னால் பரவாயில்லைபோலிருக்கிறது. மெத்தைக்கடைச் சந்தியிலோ ஸ்ரீஸ் கபே வாசலிலோ தட்டி வானுக்குள் ஏறுகையிலோ முன்பின் தெரியாத ஒருவர் உங்களைப் பார்த்துச் சிரிப்பாரென்றால் நிச்சயம் அவர் ஒரு சட்டத்தரணியாகத்தான் இருக்கவேண்டும் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

உள்ளூர் சட்டத்தொழிலில் அன்றாடம் பேசாமல் பறையாமல் வரும் அரசியல் ஆபத்துகள், ஓசி வழக்குகள், புட்டிசங்கள், சுவர் வாசகங்கள் மற்றும் தொழில் ரீதியான கழுத்தறுப்புகளுக்கு அஞ்சியும் ஊரில் மலிந்துபோன பிறந்த நாள், சாமத்தியச் சடங்கு, கோடாலிச் சாமியார் தண்ணீர்ப்பந்தல் உபயம் போன்ற சமூகசேவைக் கைங்கரியங்களிலிருந்து தப்பவும் முல்லைத்தீவுக்குப் புலம் பெயர்ந்துபோன என்னை அங்கும் யமதூதன் துரைராசாவின் உருவத்தில் துரத்திக்கொண்டு வந்தான்.

முல்லைத்தீவு ஒரு பாலைவனக் குஞ்சு.  அக்கே நான் சரணடைந்த இடமோ மாங்குளம் றோட்டில் ஒரு வெட்டை.  அதில் அநாதரவாகக்கிடந்த வீட்டை வாடைக்கு எடுத்து அதன்முன்னால் ஒரு போர்ட்டை மாட்டியதும் வழக்குகளும் கைநிறையக் காசும் வந்து குவியும் எனக் கனவு கண்டேன்.  மாறாக, வந்து சேர்ந்த நாலைந்து வழக்குகளுக்கும் முடித்துக் கொடுத்த காணி உறுதிகளுக்கும் எனக்குக் கட்டணமாகக் கிடைத்தது நெல்லு மூட்டைகளும் மள்ளாக்கொட்டைச் சாக்குகளும்தான். வாசலில் தொங்கும் போர்டில் “சட்டத்தரணியும் பிரசித்த நொத்தாரிசும்” என்ற வரியை எடுத்துவிட்டு “நெல்லு கச்சான் மொத்த வியாபாரம்” எனப் போட்டிருந்தால் இன்னும் மிகப் பொருத்தமாக இருக்கும் என்றுகூட ஒருமுறை யோசித்தேன். என் அறைமுழுவதும் சட்டப் புத்தகங்களுக்குப் பதிலாகக் கூரையைத் தொட்டபடி நிறைந்து கிடக்கும் இந்தச் சாக்குகளுக்கும் சாகா வரம்பெற்ற செத்தல் கருவாடு மணத்துக்கும் மத்தியில் எனது சட்டத்தொழில் இதுவரை தடம்புரளாமல் ஓடிக்கொண்டிருந்தது.  துரைராசா வந்து கதவைத் தட்டும்வரை.

பச்சைப் பளீரென்ற வெள்ளை வேட்டியும் நாஷனல் சேர்ட்டும் போதாக்குறைக்கு நல்ல சிவலை நிறமும் ஏறக்குறைய ஆறடி உயரமும் அறுபது வயதுமுள்ள துரைராசாவைக் காண்பவர்கள் அவர் ஒரு சாதாரண கிராமத்துப் பேர்வழி என்று சொன்னால் நம்பமாட்டார்கள்.  ஒரு எம்பியாகவோ ஆகக்குறைந்தது எம்பியின் கையாளாகவோ அல்லது உள்ளூர்ப் பள்ளிக்கூடத்துப் பிறிஞ்சிப்பலாகவோதான் இருப்பாரென நம்புவார்கள்.  அப்படி அவரை நம்ப மறுப்பவர்களுக்கு இலவச மூளைச்சலவை செய்து செத்தாலும் தன் பராக்கிரமத்தை மறுக்காதபடியும் மறக்காதபடியும் செய்துவிடுவார் துரைராசா.

ஊரில் துரைராசாவின் குடும்பம் பரம்பரை பரம்பரையாகப் பச்சைத் தண்ணியில் பலகாரம் சுடும் வல்லமை பெற்றது எனப் பெயரெடுத்தது. அவருடைய பிள்ளைகளும் உரிச்சுப்படைச்சு அவரைப் போலவே எம்டன்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.  அவர் ஊர்த் தெருத்திண்ணைகளில் மகாராசா போல வலம் வந்தாலும் நெய்க்குடத்துக்கை கைவைச்சாலும் ஒருவரும் அவரை நம்பத் தயாரில்லை என்பது எனக்கு நல்லாய்த் தெரியும்.  மிச்சம் மலிவான திறீ றோஸெஸ் சிகரெட்டை எக்கச்சக்கமான விலை விற்கும் நெவிகட் பெட்டிக்குள் வைத்து அது சேர்ட் பொக்கற்றுக்குள்ளாக வேளியில் வடிவாகத் தெரியும்படியாகக் கவனித்துக்கொள்வார். நான் சின்னவயதில் இந்தக்கோலத்தில் அவரைக் காணும்போதெல்லாம் அவர் பெரும் பணக்காரரென்றே நினைத்துக் கோள்ளுவேன்.

சமையல்காரர் கட்டியம் கூற என் அறையினுள்ளே நுழைந்த துரைராசா தானாகவே கதிரையை இழுத்துப்போட்டுக்கொண்டு  மேசை முன்னால் இருந்துவிட்டார்.  அவருடைய நாடி நரம்பை நன்கு பிடித்துப்பார்த்தவன் என்ற வகையில் அவரை மிக்க மரியாதையுடன் வரவேற்றேன்.
“என்ன அண்ணை இந்தப் பக்கம்?  எங்கடை ஊர் அலுத்துப்போச்சுது போலை கிடக்கு.” எனக் கேட்டேன்.  அவர் பதிலுக்குத் தன்னுடைய “நாலு வீட்டுக்குக் கேட்கும்” சிரிப்பை உதறியதும் மேசையில் ஒட்டியிருந்த தூசிப்படலம் பறந்துவந்து என் முகத்தில் அடித்தது.

“உங்களை விட்டால் எனக்கு மிச்சம் நம்பிக்கையான பிறக்கறாசி வேறை ஆர் இருக்கினம்” என்ற வசனத்தில் ஒரு பகுதியை வாயாலும் மறு பகுதியைக் கண், கை ஆதியாம் மற்றைய அங்கங்கள் வாயிலாகவும் சொல்லிமுடித்தார் துரைராசா.

கனக்கச் சொல்லுவானேன், துரைராசா என்னைத் தேடிவந்த சங்கதி இதுதான்: வத்தாப்பளைக்குப் போற வழியிலை குட்டை மதவடி தாண்டி வடக்காலை மனிசர் மாஞ்சாதி தலைகாட்டப் பயப்படும் அரசாங்கத்துக்குச் சொந்தமான ஏழேக்கரோ எட்டேக்கரோ அளவான காட்டு நிலத்தை சிமிக்கிடாமல் இவர் பெயருக்கு உறுதிமுடித்துத் தரவேண்டும்.  அதுவும் அங்காலை இஞ்சாலை உள்ளாக்களுக்கு எல்லுப்போலையும் ஐமிச்சம் வரக்கூடாது.  இதை இன்னொருவகையாகக் கூறுவதானால், என்னைச் சட்டத்தொழிலிலிருந்து சீட்டுக் கிழிக்கவேண்டுமென்ற தீர்மானத்தோடு வந்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும்.

அவரை எப்படி நடு இரவுக்குமுன்னம் சமாளித்து அனுப்பினேன் என்பதையோ எவ்வளவு கெட்டித்தனமாக அரசாங்கக் காணியை அவர் பிடியிலிருந்து காப்பாற்றினேன் என்பதையோ நான் இங்கே விபரிக்கப்போவதில்லை.  இவையெல்லாம் சட்டக்கல்லூரியில் சொல்லித்தராத சங்கதிகள்.  ஆனால் ஒரு கிழமைக்குப் பிறகு ஊரடிபட்டகட்டையான என் சமையல்காரன் சொன்ன கதையைக் கேட்டதும் எனக்கு உச்சந்தலையில் உலக்கையால் அடித்தமாதிரி இருந்தது.

துரைராசா எந்தப் பிறக்கறாசியாரைப் பிடித்தாரோ எவருக்கெல்லாம் இல்லாத புலுடாவெல்லாம் அடித்தாரோ எத்தனை சாராயப் போத்தல்களைத் தான தருமம் செய்தாரோ தெரியாது. ஆனால் பின்னர் நடந்தேறிய சடங்குகள் நிச்சயம் அதன் பலனாகத்தான் இருக்கவேண்டும்.

இங்கிலீசுக்காரன் காலத்திலிருந்து அரசாங்கத்துக்குச் சொந்தமென எழுதப்பட்டிருந்த அந்த ஆதனம் பின்னர் ஒரு காலகட்டத்தில் இவரின் முப்பாட்டனுக்கு முப்பாட்டனின் ராச விசுவாசத்தின் மேன்மையைக் கருத்தில்கொண்டு சீமையிலிருந்து வந்த ஓலைப்படி அவர் பெயருக்கு நன்கொடையாயிற்றாம். பின்னர் சந்ததி சந்ததியாகக் கைமாறி இறுதியில் எப்போதோ மண்டையைப் போட்ட இவரின் மலட்டுப் பெரியதாய்க் கிழவி இவர் மீது இயல்பாயுள்ள பட்சமே காரணமாக அந்த ஆதனத்தையும் அதில் அவளுக்குரிய நயம் உரித்துச் சோந்தை சகலதையும் துரைராசாவுக்கு அழிக்கப்படாத நன்கொடையாகக் கையளித்தும் ஒப்படைத்தும் விட்டாளம். 

இந்தப் பரம ரகசியத்தைக் போன அமாவாசைக்குக் கொஞ்சம் முன்னம்தான் அறிந்துகொண்ட துரைராசா இப்போதுதான் அந்த ஆதனத்தைத் தன்பெயரில் சட்டப்படியும் நியாயப்படியும் உறுதி முடித்து ஆட்சியெடுத்துக்கொண்டாராம். எப்படி இருக்கிறது கதை?  துரைராசாவைத் தவிர இன்னொருவரால் இந்தக் காரியம் செய்யமுடியாது.  இது பால்குடிக் குழந்தைக்கும் தெரிந்த விஷயம்.

முல்லைத்தீவில் ஒருதரும் மூச்சுக்காட்டவில்லை. அதுதான் எனக்கு இன்னும் பெரிய ஆச்சரியம்.

கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்குப் பிறகு துரைராசா அண்ணரை எங்களூர்க் கோயில் திருவிழாவில் சந்திக்கவேண்டுமென்ற துரதிஷ்டம் வந்துசேர்ந்தது.

ஒருசாண் அகலக் கரையுள்ள பட்டு வேட்டியைச் சண்டியாக மடித்துக் கட்டிக்கொண்டு வெறும் மார்பில் எட்டுப் பவுணோ பத்துப் பவுணோ சங்கிலி நர்த்தனமாட கோயில் வீதியில் மூத்த உபயகாரர் என்றவகையில் வளையவந்த துரைராசா என்னைக் கண்டதும் வழக்கமான அட்டகாசச் சிரிப்பை அவிழ்த்துவிட்டார்.  என் அருகில் வந்தவர், சுற்றியுள்ள எல்லாரும் அவதானிக்கும்படியாக என் தோளில் உரிமையோடு மெல்லத் தட்டி, “பிறக்கறாசி ஐயா! (ஐயாவாம், கவனம்), நீங்கள் செய்த உதவியை நான் செத்தாலும் மறக்கமாட்டன்” என்றார்.  “உதவியோ? அப்படி என்ன பெரிசாக உதவி செய்துவிட்டன்” என நான் வாயால் சொனேனோ மூக்கால் சொன்னேனோ நினைவில்லை.  அத்துணை நடுக்கம்.

“என்ன சொல்லுறியள்? முல்லைத்தீவிலை நான் காணி வாங்கின சங்கதி ஈரேழு பதினாலு உலகத்துக்கும் இப்ப தெரியும். உங்கடை உதவியில்லாமல் இதை நான் செய்திருக்கேலாது” என்று என்னைப் பார்த்தபடி சொன்னவர் கையோடு மற்றவர்கள் பக்கம் திரும்பி, “இவர் என்னட்டை முத்திரைக் கூலிகூட வாங்கமாட்டன் எண்டு சொல்லிப்போடார்” என்று சொல்லி என்னைப்போல் நூற்றுக்கு நூறுவீதம் திகைத்துப்போய் நின்ற ஊர்க்காரரை வயிரவருக்குப் படைத்துவைத்த தளிசை அளவுக்கு வாய்பிளக்க வைத்தார்.

விளம்பரம் ஓசியில் வந்ததே என்று அறிந்து மகிழ்வதா அல்லது அது தொழிலுக்கே கொள்ளிவைக்குமென்று கண்டு அலறி ஓடுவதா?  ஒரு கணப்பொழுதுக்குள் எல்லாம் விளங்கியது.

முல்லைத்தீவில் கள்ள உறுதி எழுதுவதில் வித்துவான் பட்டம் பெற்றவர்கள் டசின் கணக்கில் இருக்கிறார்கள். லோச் சட்டம் படிக்காமலே நொத்தாரிசுக் காரியங்களைக் கரைத்துக் குடித்தவர்கள் நிறையப்பேர் இருக்கிறார்கள். இவர்களால் உயிரோடு இருக்கிற இல்லாத நொத்தாரிசுகளால் அவர்களின் கண் படாமல் கை படாமல் ஒழிச்சு மறைச்சு அத்தாட்சிப்படுத்தப்பட்ட உறுதிகள் அங்கே காணிக் கந்தோரில் இன்றைக்கு இருந்துவிட்டு நாளைக்குக் கண்ணறிமாயமாய்ப் மறைந்துவிடுமாம். எனக்கேன் இது அப்போது மூளையில் உறைக்காமற் போனது?

அட கடவுளே! அந்தக் காணி உறுதியில் என்னுடைய நொத்தாரிசு முத்திரையையும் கையெழுத்தையும் எனக்கே தெரியாமல் உருவியும் செருவியும் காணியை ஆட்சி எடுத்துவிட்டு இங்கே வந்து “ஐயா” போடுகிறாரோ துரைராசா?  எனக்கு வயித்தைக் கலக்கியது.

காணிக்கந்தோரில் உறுதிக் கொப்பியைப் போய்ப் பார்த்து அறிந்து கொள்வதா அல்லது முல்லைத்தீவுத் தொழிலுக்கு ஒரேயடியாக முழுக்குப் போடுவதா?

நான் இன்னமும் முடிவுசெய்யவில்லை.

சட்டம்தன் வழிச்செல்லல் கடன்


எங்கள் புலோலிப் பக்கத்துத் துரைராசாவைப் போயும் போயும் முல்லைத்தீவில் வைத்துச் சந்திப்பேனென்று நான் கனவிலும் கருதவில்லை.  அதுவும் கடைத்தெருவிலோ அல்லது அவர் வழக்கமாக இழுத்தடிக்கப்படும் கோட்டடியிலோ அல்ல.  ஒரு அந்திப்பொழுதில் என் சட்ட அலுவலகத் திண்ணையில் திடீரென வந்து நின்றார்.  கையில் அரிவாளோடு இரத்தம் சொட்டச் சொட்ட ஒருவர் உங்கள் வீட்டு வாசல்படியில் நடுச்சாமத்தில் வந்து நின்றால் எப்படியிருக்கும் உங்களுக்கு?  கிட்டத்தட்ட அதே நிலையில்தான் நான் இருந்தேன்.

பருத்தித்துறை வீதிகளில் தடக்கிவிழுந்தால் ஒரு சட்டத்தரணியின் மேல்தான் விழவேண்டிவரும். அவர்கள் நாவற்பழம்போல் அவ்வளவுக்கு அங்கே மலிவு. தங்கள் கடை வாசலில் நின்றுகொண்டு தெருவில் வருவோர் போவோரையெல்லாம் வாங்கோ, வாங்கோ என்று கூவி அழைக்கும் நகை வியாபாரிகள் எங்களூர்ச் சட்டத்தரணிகளுக்கு முன்னால் பரவாயில்லைபோலிருக்கிறது. மெத்தைக்கடைச் சந்தியிலோ ஸ்ரீஸ் கபே வாசலிலோ தட்டி வானுக்குள் ஏறுகையிலோ முன்பின் தெரியாத ஒருவர் உங்களைப் பார்த்துச் சிரிப்பாரென்றால் நிச்சயம் அவர் ஒரு சட்டத்தரணியாகத்தான் இருக்கவேண்டும் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

உள்ளூர் சட்டத்தொழிலில் அன்றாடம் பேசாமல் பறையாமல் வரும் அரசியல் ஆபத்துகள், ஓசி வழக்குகள், புட்டிசங்கள், சுவர் வாசகங்கள் மற்றும் தொழில் ரீதியான கழுத்தறுப்புகளுக்கு அஞ்சியும் ஊரில் மலிந்துபோன பிறந்த நாள், சாமத்தியச் சடங்கு, கோடாலிச் சாமியார் தண்ணீர்ப்பந்தல் உபயம் போன்ற சமூகசேவைக் கைங்கரியங்களிலிருந்து தப்பவும் முல்லைத்தீவுக்குப் புலம் பெயர்ந்துபோன என்னை அங்கும் யமதூதன் துரைராசாவின் உருவத்தில் துரத்திக்கொண்டு வந்தான்.

முல்லைத்தீவு ஒரு பாலைவனக் குஞ்சு.  அக்கே நான் சரணடைந்த இடமோ மாங்குளம் றோட்டில் ஒரு வெட்டை.  அதில் அநாதரவாகக்கிடந்த வீட்டை வாடைக்கு எடுத்து அதன்முன்னால் ஒரு போர்ட்டை மாட்டியதும் வழக்குகளும் கைநிறையக் காசும் வந்து குவியும் எனக் கனவு கண்டேன்.  மாறாக, வந்து சேர்ந்த நாலைந்து வழக்குகளுக்கும் முடித்துக் கொடுத்த காணி உறுதிகளுக்கும் எனக்குக் கட்டணமாகக் கிடைத்தது நெல்லு மூட்டைகளும் மள்ளாக்கொட்டைச் சாக்குகளும்தான். வாசலில் தொங்கும் போர்டில் “சட்டத்தரணியும் பிரசித்த நொத்தாரிசும்” என்ற வரியை எடுத்துவிட்டு “நெல்லு கச்சான் மொத்த வியாபாரம்” எனப் போட்டிருந்தால் இன்னும் மிகப் பொருத்தமாக இருக்கும் என்றுகூட ஒருமுறை யோசித்தேன். என் அறைமுழுவதும் சட்டப் புத்தகங்களுக்குப் பதிலாகக் கூரையைத் தொட்டபடி நிறைந்து கிடக்கும் இந்தச் சாக்குகளுக்கும் சாகா வரம்பெற்ற செத்தல் கருவாடு மணத்துக்கும் மத்தியில் எனது சட்டத்தொழில் இதுவரை தடம்புரளாமல் ஓடிக்கொண்டிருந்தது.  துரைராசா வந்து கதவைத் தட்டும்வரை.

பச்சைப் பளீரென்ற வெள்ளை வேட்டியும் நாஷனல் சேர்ட்டும் போதாக்குறைக்கு நல்ல சிவலை நிறமும் ஏறக்குறைய ஆறடி உயரமும் அறுபது வயதுமுள்ள துரைராசாவைக் காண்பவர்கள் அவர் ஒரு சாதாரண கிராமத்துப் பேர்வழி என்று சொன்னால் நம்பமாட்டார்கள்.  ஒரு எம்பியாகவோ ஆகக்குறைந்தது எம்பியின் கையாளாகவோ அல்லது உள்ளூர்ப் பள்ளிக்கூடத்துப் பிறிஞ்சிப்பலாகவோதான் இருப்பாரென நம்புவார்கள்.  அப்படி அவரை நம்ப மறுப்பவர்களுக்கு இலவச மூளைச்சலவை செய்து செத்தாலும் தன் பராக்கிரமத்தை மறுக்காதபடியும் மறக்காதபடியும் செய்துவிடுவார் துரைராசா.

ஊரில் துரைராசாவின் குடும்பம் பரம்பரை பரம்பரையாகப் பச்சைத் தண்ணியில் பலகாரம் சுடும் வல்லமை பெற்றது எனப் பெயரெடுத்தது. அவருடைய பிள்ளைகளும் உரிச்சுப்படைச்சு அவரைப் போலவே எம்டன்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.  அவர் ஊர்த் தெருத்திண்ணைகளில் மகாராசா போல வலம் வந்தாலும் நெய்க்குடத்துக்கை கைவைச்சாலும் ஒருவரும் அவரை நம்பத் தயாரில்லை என்பது எனக்கு நல்லாய்த் தெரியும்.  மிச்சம் மலிவான திறீ றோஸெஸ் சிகரெட்டை எக்கச்சக்கமான விலை விற்கும் நெவிகட் பெட்டிக்குள் வைத்து அது சேர்ட் பொக்கற்றுக்குள்ளாக வேளியில் வடிவாகத் தெரியும்படியாகக் கவனித்துக்கொள்வார். நான் சின்னவயதில் இந்தக்கோலத்தில் அவரைக் காணும்போதெல்லாம் அவர் பெரும் பணக்காரரென்றே நினைத்துக் கோள்ளுவேன்.

சமையல்காரர் கட்டியம் கூற என் அறையினுள்ளே நுழைந்த துரைராசா தானாகவே கதிரையை இழுத்துப்போட்டுக்கொண்டு  மேசை முன்னால் இருந்துவிட்டார்.  அவருடைய நாடி நரம்பை நன்கு பிடித்துப்பார்த்தவன் என்ற வகையில் அவரை மிக்க மரியாதையுடன் வரவேற்றேன்.
“என்ன அண்ணை இந்தப் பக்கம்?  எங்கடை ஊர் அலுத்துப்போச்சுது போலை கிடக்கு.” எனக் கேட்டேன்.  அவர் பதிலுக்குத் தன்னுடைய “நாலு வீட்டுக்குக் கேட்கும்” சிரிப்பை உதறியதும் மேசையில் ஒட்டியிருந்த தூசிப்படலம் பறந்துவந்து என் முகத்தில் அடித்தது.

“உங்களை விட்டால் எனக்கு மிச்சம் நம்பிக்கையான பிறக்கறாசி வேறை ஆர் இருக்கினம்” என்ற வசனத்தில் ஒரு பகுதியை வாயாலும் மறு பகுதியைக் கண், கை ஆதியாம் மற்றைய அங்கங்கள் வாயிலாகவும் சொல்லிமுடித்தார் துரைராசா.

கனக்கச் சொல்லுவானேன், துரைராசா என்னைத் தேடிவந்த சங்கதி இதுதான்: வத்தாப்பளைக்குப் போற வழியிலை குட்டை மதவடி தாண்டி வடக்காலை மனிசர் மாஞ்சாதி தலைகாட்டப் பயப்படும் அரசாங்கத்துக்குச் சொந்தமான ஏழேக்கரோ எட்டேக்கரோ அளவான காட்டு நிலத்தை சிமிக்கிடாமல் இவர் பெயருக்கு உறுதிமுடித்துத் தரவேண்டும்.  அதுவும் அங்காலை இஞ்சாலை உள்ளாக்களுக்கு எல்லுப்போலையும் ஐமிச்சம் வரக்கூடாது.  இதை இன்னொருவகையாகக் கூறுவதானால், என்னைச் சட்டத்தொழிலிலிருந்து சீட்டுக் கிழிக்கவேண்டுமென்ற தீர்மானத்தோடு வந்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும்.

அவரை எப்படி நடு இரவுக்குமுன்னம் சமாளித்து அனுப்பினேன் என்பதையோ எவ்வளவு கெட்டித்தனமாக அரசாங்கக் காணியை அவர் பிடியிலிருந்து காப்பாற்றினேன் என்பதையோ நான் இங்கே விபரிக்கப்போவதில்லை.  இவையெல்லாம் சட்டக்கல்லூரியில் சொல்லித்தராத சங்கதிகள்.  ஆனால் ஒரு கிழமைக்குப் பிறகு ஊரடிபட்டகட்டையான என் சமையல்காரன் சொன்ன கதையைக் கேட்டதும் எனக்கு உச்சந்தலையில் உலக்கையால் அடித்தமாதிரி இருந்தது.

துரைராசா எந்தப் பிறக்கறாசியாரைப் பிடித்தாரோ எவருக்கெல்லாம் இல்லாத புலுடாவெல்லாம் அடித்தாரோ எத்தனை சாராயப் போத்தல்களைத் தான தருமம் செய்தாரோ தெரியாது. ஆனால் பின்னர் நடந்தேறிய சடங்குகள் நிச்சயம் அதன் பலனாகத்தான் இருக்கவேண்டும்.

இங்கிலீசுக்காரன் காலத்திலிருந்து அரசாங்கத்துக்குச் சொந்தமென எழுதப்பட்டிருந்த அந்த ஆதனம் பின்னர் ஒரு காலகட்டத்தில் இவரின் முப்பாட்டனுக்கு முப்பாட்டனின் ராச விசுவாசத்தின் மேன்மையைக் கருத்தில்கொண்டு சீமையிலிருந்து வந்த ஓலைப்படி அவர் பெயருக்கு நன்கொடையாயிற்றாம். பின்னர் சந்ததி சந்ததியாகக் கைமாறி இறுதியில் எப்போதோ மண்டையைப் போட்ட இவரின் மலட்டுப் பெரியதாய்க் கிழவி இவர் மீது இயல்பாயுள்ள பட்சமே காரணமாக அந்த ஆதனத்தையும் அதில் அவளுக்குரிய நயம் உரித்துச் சோந்தை சகலதையும் துரைராசாவுக்கு அழிக்கப்படாத நன்கொடையாகக் கையளித்தும் ஒப்படைத்தும் விட்டாளம். 

இந்தப் பரம ரகசியத்தைக் போன அமாவாசைக்குக் கொஞ்சம் முன்னம்தான் அறிந்துகொண்ட துரைராசா இப்போதுதான் அந்த ஆதனத்தைத் தன்பெயரில் சட்டப்படியும் நியாயப்படியும் உறுதி முடித்து ஆட்சியெடுத்துக்கொண்டாராம். எப்படி இருக்கிறது கதை?  துரைராசாவைத் தவிர இன்னொருவரால் இந்தக் காரியம் செய்யமுடியாது.  இது பால்குடிக் குழந்தைக்கும் தெரிந்த விஷயம்.

முல்லைத்தீவில் ஒருதரும் மூச்சுக்காட்டவில்லை. அதுதான் எனக்கு இன்னும் பெரிய ஆச்சரியம்.

கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்குப் பிறகு துரைராசா அண்ணரை எங்களூர்க் கோயில் திருவிழாவில் சந்திக்கவேண்டுமென்ற துரதிஷ்டம் வந்துசேர்ந்தது.

ஒருசாண் அகலக் கரையுள்ள பட்டு வேட்டியைச் சண்டியாக மடித்துக் கட்டிக்கொண்டு வெறும் மார்பில் எட்டுப் பவுணோ பத்துப் பவுணோ சங்கிலி நர்த்தனமாட கோயில் வீதியில் மூத்த உபயகாரர் என்றவகையில் வளையவந்த துரைராசா என்னைக் கண்டதும் வழக்கமான அட்டகாசச் சிரிப்பை அவிழ்த்துவிட்டார்.  என் அருகில் வந்தவர், சுற்றியுள்ள எல்லாரும் அவதானிக்கும்படியாக என் தோளில் உரிமையோடு மெல்லத் தட்டி, “பிறக்கறாசி ஐயா! (ஐயாவாம், கவனம்), நீங்கள் செய்த உதவியை நான் செத்தாலும் மறக்கமாட்டன்” என்றார்.  “உதவியோ? அப்படி என்ன பெரிசாக உதவி செய்துவிட்டன்” என நான் வாயால் சொனேனோ மூக்கால் சொன்னேனோ நினைவில்லை.  அத்துணை நடுக்கம்.

“என்ன சொல்லுறியள்? முல்லைத்தீவிலை நான் காணி வாங்கின சங்கதி ஈரேழு பதினாலு உலகத்துக்கும் இப்ப தெரியும். உங்கடை உதவியில்லாமல் இதை நான் செய்திருக்கேலாது” என்று என்னைப் பார்த்தபடி சொன்னவர் கையோடு மற்றவர்கள் பக்கம் திரும்பி, “இவர் என்னட்டை முத்திரைக் கூலிகூட வாங்கமாட்டன் எண்டு சொல்லிப்போடார்” என்று சொல்லி என்னைப்போல் நூற்றுக்கு நூறுவீதம் திகைத்துப்போய் நின்ற ஊர்க்காரரை வயிரவருக்குப் படைத்துவைத்த தளிசை அளவுக்கு வாய்பிளக்க வைத்தார்.

விளம்பரம் ஓசியில் வந்ததே என்று அறிந்து மகிழ்வதா அல்லது அது தொழிலுக்கே கொள்ளிவைக்குமென்று கண்டு அலறி ஓடுவதா?  ஒரு கணப்பொழுதுக்குள் எல்லாம் விளங்கியது.

முல்லைத்தீவில் கள்ள உறுதி எழுதுவதில் வித்துவான் பட்டம் பெற்றவர்கள் டசின் கணக்கில் இருக்கிறார்கள். லோச் சட்டம் படிக்காமலே நொத்தாரிசுக் காரியங்களைக் கரைத்துக் குடித்தவர்கள் நிறையப்பேர் இருக்கிறார்கள். இவர்களால் உயிரோடு இருக்கிற இல்லாத நொத்தாரிசுகளால் அவர்களின் கண் படாமல் கை படாமல் ஒழிச்சு மறைச்சு அத்தாட்சிப்படுத்தப்பட்ட உறுதிகள் அங்கே காணிக் கந்தோரில் இன்றைக்கு இருந்துவிட்டு நாளைக்குக் கண்ணறிமாயமாய்ப் மறைந்துவிடுமாம். எனக்கேன் இது அப்போது மூளையில் உறைக்காமற் போனது?

அட கடவுளே! அந்தக் காணி உறுதியில் என்னுடைய நொத்தாரிசு முத்திரையையும் கையெழுத்தையும் எனக்கே தெரியாமல் உருவியும் செருவியும் காணியை ஆட்சி எடுத்துவிட்டு இங்கே வந்து “ஐயா” போடுகிறாரோ துரைராசா?  எனக்கு வயித்தைக் கலக்கியது.

காணிக்கந்தோரில் உறுதிக் கொப்பியைப் போய்ப் பார்த்து அறிந்து கொள்வதா அல்லது முல்லைத்தீவுத் தொழிலுக்கு ஒரேயடியாக முழுக்குப் போடுவதா?

நான் இன்னமும் முடிவுசெய்யவில்லை.

Aug 20, 2012

கவிஞர் காசி ஆனந்தன் Kasi Ananthan


கவிஞர் காசி ஆனந்தன் அன்றொருகால் கொழும்பு சரஸ்வதி மண்டபத்தில் நடந்ததோர் அரசியல் கூட்டத்தில் உரையாற்ற வந்திருந்தார்.  காசி வருகிறாரென்றால் கூட்டம் தேர்த்திருவிழா போல் அலைமோதத் தொடங்கிவிடும்.  மண்டபம் உள்ளும் புறமும் நிறைந்து வழியும்.  கவிஞரின் அபிமானிகள் நேரத்தொடு தேனீக்களாகக் குவிந்துகொள்வார்கள்.


அது சிரிமா பண்டார நாயக்கா அரச பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்துவிட்ட கொடுமைமிக்க காலம்; சட்டமேதை கொல்வின் ஆர். டீ சில்வாவின் புதிய அரசியலமைப்புச் சட்டத்தை* அவசரமவசரமாகத் திணிக்கத்தொடங்கிய அராஜக காலம்; தமிழ் அமைச்சர் ஒருவரும் அதற்குத் துணை நின்ற துயர் மிகுந்த காலம்.

வழக்கத்தில் கூட்டத்தில் பேசவென மேடையேறுகிறவர் “தலைவரவர்களே...” எனத் தொடங்கி அங்கு வருகை தந்தவர்களுக்குத் தன் முதல் வணக்கத்தையும் மரியாதையையும் செலுத்துவது வழக்கமல்லவா? இதோ காசி வந்து மைக் முன்னால் நிற்கிறார்.  மண்டபமும் சுற்ற வீசிய காற்றும் மக்களோடு சேர்ந்து உறைந்து போயினவோ!  அத்துணைப் பேரமைதி.  அவர் கூறப்போவதை அணுபிசகாமல் செவிமடுக்க அத்தனை நெஞ்சங்களும் சுவாசிக்க மறந்து சமைந்துபோய் நின்றன.

“சனியன்கள்”.  காசியின் குரல் பலத்த இடிமுழக்கத்தோடு தெறித்துப் பளீரென வானத்தைக் கிழிக்கும் ஒளிக்கீற்றாகி அங்கிருந்த எல்லாரையும் ஒருமுறை உலுக்கியெடுத்தது.  அடுத்த கணம் அந்த இடிமுழக்கத்தையே விழுங்குவதுபோன்று எழுந்தது மக்களின் பேரிரைச்சல்.  ஒரு பேரதிசயத்தை நேரில் கண்டு பரவசமாயினர் போன்ற உணர்வை அவர்கள் அரங்கம் அதிர வெளிப்படுத்தினர்.

வெறும் ஒரு சொல்லால் ஓராயிரம் பேரையே அப்படி உலுக்கிவைக்க முடியுமென்றால் அச்சொல்லின் பொருள் மட்டுமா, அந்தச் சொல்லின் அப்போதைய உரித்தாளி, அதைச் சொன்ன சூழல், சுட்டிக்காட்டப்பட்ட பொருள் அல்லது மனிதர், அச்சொல்லில் புதைந்து கிடந்து குபுக்கெனப் பளீரிட்டு எழும் உயிரோட்டம் எல்லாமே சொல்லுவது ஒரு சிறு சொல்லாயினும் அதைச் செப்பமாகச் சொல்வதிலல்லவா எல்லாரும் போற்றும் சொல் திறன் இருக்கிறது.

காசி ஆனந்தன் இச் சொற்றிறனின் ஏகபோக உரிமையாளர்.  இதற்கெதிராக இதுவரை எந்தவித அப்பீலோ ஆட்சேபணையோ எழுந்தது கிடையாது.
***
காசியும் நானும் அப்போது கல்வி அமைச்சில் பணியாற்றிக் கொண்டிருந்தோம்.  ஒரே விறாந்தை எங்கள் இருவரையும் இறுக்கமாகச் சேர்த்து வைத்தது.  அந்த விறாந்தையில் நான் நடை பயில்வதெல்லாம் அவரைக் காணவேயன்றி வேறொரு காரணத்தையும் கொண்டிருக்கவில்லை.

கையிலே புத்தகம், கண்களில் கனவு.  இதுதான் கந்தோர் மேசைமுன்னே காணும் காசியின் வழக்கமான தோற்றம்.

காசியை நான் அறிந்து வைத்திருந்ததிலும் பார்க்க அரசாங்கம் அறிந்து வைத்திருந்ததே அதிகம் எனப் பின்னர் தெரிந்துகொண்டேன்.  அவர் எவ்வளவுக்கெவ்வளவு சிங்களம் படிக்க மறுத்தாரோ அவ்வளவுக்கவ்வளவு அவர் அதைப் படிக்கவேண்டும் என்பது அரசாங்கத்தின் பிடிவாதமாயிருந்தது.  அவருக்குத் தெரியாமலேயே அவர் பெயரைச் சிங்களச் சோதனைகளுக்கு அனுப்பி தம் தாய்மொழிப்பற்றைப் பறைசாற்றிக்கொண்டார்கள் திணைக்கள உத்தியோகத்தர்கள்.

தாவீதுக்கும் கோலியாத்துக்கும் இடையே நடந்த போரில் யார் வென்றார்கள் என்பது உலகம் அறிந்த கதை.  காசி வென்ற கதையும் உலகம் அறிந்த ஒன்று.

உயிரோடு இருக்கும்போதே ஒருவரைப் புகழ்ந்துவிடவேண்டும்.  அதாகப்பட்டது, நான் உயிரோடு இருக்கும்போதெ புகழ்வேண்டிய ஒருவரைப் புகழ்ந்துவிடவேண்டும் என்பது என் தாழ்மையான அபிப்பிராயம்.  அந்தவகையில், காசியைப் புகழவேண்டுமென நினைத்தவர்களெல்லாம் புகழ்ந்து தம்மையும் உயர்த்திக்கோண்டார்கள்.  இகழவந்தவர்களும் இகழ்ந்து தமக்குத்தாமே சேற்றை அழகாகப் பூசிக்கொண்டார்கள்.

காசி இன்னொரு இமயம்.  அவ்வளவுதான் சொல்வேன்.
---------------
*
பிற்குறிப்பு: இதே கூட்டத்தில் சாகா வரம்பெற்ற இன்னொரு கூற்றையும் காசி முன்மொழிந்தமை என் நினைவுக்கு வருகிறது: “சில்வாவின் சாசனம் கிழித்தெறியப்பட்டு செல்வாவின் சாசனம் (சமஷ்டி அரசியலமைப்பு) அரசேறவேண்டும்.”


கவிஞர் காசி ஆனந்தன் Kasi Ananthan


கவிஞர் காசி ஆனந்தன் அன்றொருகால் கொழும்பு சரஸ்வதி மண்டபத்தில் நடந்ததோர் அரசியல் கூட்டத்தில் உரையாற்ற வந்திருந்தார்.  காசி வருகிறாரென்றால் கூட்டம் தேர்த்திருவிழா போல் அலைமோதத் தொடங்கிவிடும்.  மண்டபம் உள்ளும் புறமும் நிறைந்து வழியும்.  கவிஞரின் அபிமானிகள் நேரத்தொடு தேனீக்களாகக் குவிந்துகொள்வார்கள்.


அது சிரிமா பண்டார நாயக்கா அரச பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்துவிட்ட கொடுமைமிக்க காலம்; சட்டமேதை கொல்வின் ஆர். டீ சில்வாவின் புதிய அரசியலமைப்புச் சட்டத்தை* அவசரமவசரமாகத் திணிக்கத்தொடங்கிய அராஜக காலம்; தமிழ் அமைச்சர் ஒருவரும் அதற்குத் துணை நின்ற துயர் மிகுந்த காலம்.

வழக்கத்தில் கூட்டத்தில் பேசவென மேடையேறுகிறவர் “தலைவரவர்களே...” எனத் தொடங்கி அங்கு வருகை தந்தவர்களுக்குத் தன் முதல் வணக்கத்தையும் மரியாதையையும் செலுத்துவது வழக்கமல்லவா? இதோ காசி வந்து மைக் முன்னால் நிற்கிறார்.  மண்டபமும் சுற்ற வீசிய காற்றும் மக்களோடு சேர்ந்து உறைந்து போயினவோ!  அத்துணைப் பேரமைதி.  அவர் கூறப்போவதை அணுபிசகாமல் செவிமடுக்க அத்தனை நெஞ்சங்களும் சுவாசிக்க மறந்து சமைந்துபோய் நின்றன.

“சனியன்கள்”.  காசியின் குரல் பலத்த இடிமுழக்கத்தோடு தெறித்துப் பளீரென வானத்தைக் கிழிக்கும் ஒளிக்கீற்றாகி அங்கிருந்த எல்லாரையும் ஒருமுறை உலுக்கியெடுத்தது.  அடுத்த கணம் அந்த இடிமுழக்கத்தையே விழுங்குவதுபோன்று எழுந்தது மக்களின் பேரிரைச்சல்.  ஒரு பேரதிசயத்தை நேரில் கண்டு பரவசமாயினர் போன்ற உணர்வை அவர்கள் அரங்கம் அதிர வெளிப்படுத்தினர்.

வெறும் ஒரு சொல்லால் ஓராயிரம் பேரையே அப்படி உலுக்கிவைக்க முடியுமென்றால் அச்சொல்லின் பொருள் மட்டுமா, அந்தச் சொல்லின் அப்போதைய உரித்தாளி, அதைச் சொன்ன சூழல், சுட்டிக்காட்டப்பட்ட பொருள் அல்லது மனிதர், அச்சொல்லில் புதைந்து கிடந்து குபுக்கெனப் பளீரிட்டு எழும் உயிரோட்டம் எல்லாமே சொல்லுவது ஒரு சிறு சொல்லாயினும் அதைச் செப்பமாகச் சொல்வதிலல்லவா எல்லாரும் போற்றும் சொல் திறன் இருக்கிறது.

காசி ஆனந்தன் இச் சொற்றிறனின் ஏகபோக உரிமையாளர்.  இதற்கெதிராக இதுவரை எந்தவித அப்பீலோ ஆட்சேபணையோ எழுந்தது கிடையாது.
***
காசியும் நானும் அப்போது கல்வி அமைச்சில் பணியாற்றிக் கொண்டிருந்தோம்.  ஒரே விறாந்தை எங்கள் இருவரையும் இறுக்கமாகச் சேர்த்து வைத்தது.  அந்த விறாந்தையில் நான் நடை பயில்வதெல்லாம் அவரைக் காணவேயன்றி வேறொரு காரணத்தையும் கொண்டிருக்கவில்லை.

கையிலே புத்தகம், கண்களில் கனவு.  இதுதான் கந்தோர் மேசைமுன்னே காணும் காசியின் வழக்கமான தோற்றம்.

காசியை நான் அறிந்து வைத்திருந்ததிலும் பார்க்க அரசாங்கம் அறிந்து வைத்திருந்ததே அதிகம் எனப் பின்னர் தெரிந்துகொண்டேன்.  அவர் எவ்வளவுக்கெவ்வளவு சிங்களம் படிக்க மறுத்தாரோ அவ்வளவுக்கவ்வளவு அவர் அதைப் படிக்கவேண்டும் என்பது அரசாங்கத்தின் பிடிவாதமாயிருந்தது.  அவருக்குத் தெரியாமலேயே அவர் பெயரைச் சிங்களச் சோதனைகளுக்கு அனுப்பி தம் தாய்மொழிப்பற்றைப் பறைசாற்றிக்கொண்டார்கள் திணைக்கள உத்தியோகத்தர்கள்.

தாவீதுக்கும் கோலியாத்துக்கும் இடையே நடந்த போரில் யார் வென்றார்கள் என்பது உலகம் அறிந்த கதை.  காசி வென்ற கதையும் உலகம் அறிந்த ஒன்று.

உயிரோடு இருக்கும்போதே ஒருவரைப் புகழ்ந்துவிடவேண்டும்.  அதாகப்பட்டது, நான் உயிரோடு இருக்கும்போதெ புகழ்வேண்டிய ஒருவரைப் புகழ்ந்துவிடவேண்டும் என்பது என் தாழ்மையான அபிப்பிராயம்.  அந்தவகையில், காசியைப் புகழவேண்டுமென நினைத்தவர்களெல்லாம் புகழ்ந்து தம்மையும் உயர்த்திக்கோண்டார்கள்.  இகழவந்தவர்களும் இகழ்ந்து தமக்குத்தாமே சேற்றை அழகாகப் பூசிக்கொண்டார்கள்.

காசி இன்னொரு இமயம்.  அவ்வளவுதான் சொல்வேன்.
---------------
*
பிற்குறிப்பு: இதே கூட்டத்தில் சாகா வரம்பெற்ற இன்னொரு கூற்றையும் காசி முன்மொழிந்தமை என் நினைவுக்கு வருகிறது: “சில்வாவின் சாசனம் கிழித்தெறியப்பட்டு செல்வாவின் சாசனம் (சமஷ்டி அரசியலமைப்பு) அரசேறவேண்டும்.”


Aug 19, 2012

கத்தரித் தோட்டத்து வெருளி


ஊருக்குப் போனால் இன்றெல்லாம் கத்தரித் தோட்டங்களைப் பார்ப்பது அரிது. ஆனால் கத்தரித் தோட்டத்து வெருளி என அழைக்கப்படும் நிறையப்பேரைப் பார்க்கலாம். இந்த வெருளிக்கேன் இவ்வளவு மௌசு வந்தது? நவாலியூர் சோமசுந்தரப் புலவர் என்ன சொல்கிறாரெனப் பார்ப்போம்.

கத்தரி வெருளி

நவாலியூர் சோமசுந்தரப்புலவர்
-------------------------------------------

கத்தரித் தோட்டத்து மத்தியிலே நின்று

காவல் புரிகின்ற சேவகா! - நின்று

காவல் புரிகின்ற சேவகா!

மெத்தக் கவனமாய்க் கூலியும் வாங்காமல்

வேலை புரிபவன் வேறுயார்! - உன்னைப்போல்

வேலை புரிபவன் வேறுயார்?



கண்ணு மிமையாமல் நித்திரை கொள்ளாமல்

காவல் புரிகின்ற சேவகா! - என்றும்

காவல் புரிகின்ற சேவகா!

எண்ணி உன்னைப்போல் இரவுபகலாக

ஏவல் புரிபவன் வேறுயார்? - என்றும்

ஏவல் புரிபவன் வேறுயார்?



வட்டமான பெரும் பூசினிக்காய் போல

மஞ்சள் நிற உறு மாலைப்பார்!- தலையில்

மஞ்சள் நிற உறு மாலைப்பார்!

கட்டியிறுக்கிய சட்டையைப் பாரங்கே

கைகளில் அம்பொடு வில்லைப்பார்!-இரு

கைகளில் அம்பொடு வில்லைப்பார்!



தொட்டு முறுக்காத மீசையைப்பார்! கறைச்

சோகிபோலே பெரும் பல்லைப்பார்! - கறைச்

சோகிபோலே பெரும் பல்லைப்பார்!

கட்டிய கச்சையில் விட்டுச் செருகிய

கட்டை உடைவாளின் தேசுபார்! - ஆகா

கட்டை உடைவாளின் தேசுபார்!



பூட்டிய வில்லுங் குறிவைத்த பாணமும்

பொல்லாத பார்வையுங் கண்டதோ ? - உன்றன்

பொல்லாத பார்வையுங் கண்டதோ ?

வாட்ட மில்லாப்பயிர் மேயவந்த பசு

வாலைக் கிளப்பிக்கொண் டோடுதே - வெடி

வாலைக் கிளப்பிக்கொண் டோடுதே



கள்ளக் குணமுள்ள காக்கை உன்னைக்கண்டு

கத்திக் கத்திக் கரைந்தோடுமே - கூடிக்

கத்திக் கத்திக் கரைந்தோடுமே

நள்ளிரவில் வருகள்வனுனைக் கண்டு

நடுநடுங்கி மனம் வாடுமே - ஏங்கி

நடுநடுங்கி மனம் வாடுமே



ஏழைக் கமக்காரன் வேளைக் குதவிசெய்

ஏவற்காரன் நீயே யென்னினும் - நல்ல

ஏவற்காரன் நீயே யென்னினும்

ஆளைப்போலப் போலி வேடக்காரன் நீயே

ஆவதறிந்தன னுண்மையே - போலி

ஆவதறிந்தன னுண்மையே



தூரத்திலே யுனைக் கண்டவுட னஞ்சித்

துண்ணென் றிடித்ததென் நெஞ்சகம் - மிகத்

துண்ணென் றிடித்ததென் நெஞ்சகம்

சேரச் சேரப் போலி வேடக்காரனென்று

தெரிய வந்ததுன் வஞ்சகம் - நன்று

தெரிய வந்ததுன் வஞ்சகம்



சிங்கத்தின் தோலினைப் போர்த்த கழுதைபோல்

தேசத்திலே பலர் உண்டுகாண் - இந்தத்

தேசத்திலே பலர் உண்டுகாண்

அங்கவர் தம்மைக்கண் டேமாந்து போகா

அறிவு படைத்தனன் இன்றுநான் - உன்னில்

அறிவு படைத்தனன் இன்றுநான்.

Courtesy: http://paadal.blogspot.ca/2005/03/blog-post.html

கத்தரித் தோட்டத்து வெருளி


ஊருக்குப் போனால் இன்றெல்லாம் கத்தரித் தோட்டங்களைப் பார்ப்பது அரிது. ஆனால் கத்தரித் தோட்டத்து வெருளி என அழைக்கப்படும் நிறையப்பேரைப் பார்க்கலாம். இந்த வெருளிக்கேன் இவ்வளவு மௌசு வந்தது? நவாலியூர் சோமசுந்தரப் புலவர் என்ன சொல்கிறாரெனப் பார்ப்போம்.

கத்தரி வெருளி

நவாலியூர் சோமசுந்தரப்புலவர்
-------------------------------------------

கத்தரித் தோட்டத்து மத்தியிலே நின்று

காவல் புரிகின்ற சேவகா! - நின்று

காவல் புரிகின்ற சேவகா!

மெத்தக் கவனமாய்க் கூலியும் வாங்காமல்

வேலை புரிபவன் வேறுயார்! - உன்னைப்போல்

வேலை புரிபவன் வேறுயார்?



கண்ணு மிமையாமல் நித்திரை கொள்ளாமல்

காவல் புரிகின்ற சேவகா! - என்றும்

காவல் புரிகின்ற சேவகா!

எண்ணி உன்னைப்போல் இரவுபகலாக

ஏவல் புரிபவன் வேறுயார்? - என்றும்

ஏவல் புரிபவன் வேறுயார்?



வட்டமான பெரும் பூசினிக்காய் போல

மஞ்சள் நிற உறு மாலைப்பார்!- தலையில்

மஞ்சள் நிற உறு மாலைப்பார்!

கட்டியிறுக்கிய சட்டையைப் பாரங்கே

கைகளில் அம்பொடு வில்லைப்பார்!-இரு

கைகளில் அம்பொடு வில்லைப்பார்!



தொட்டு முறுக்காத மீசையைப்பார்! கறைச்

சோகிபோலே பெரும் பல்லைப்பார்! - கறைச்

சோகிபோலே பெரும் பல்லைப்பார்!

கட்டிய கச்சையில் விட்டுச் செருகிய

கட்டை உடைவாளின் தேசுபார்! - ஆகா

கட்டை உடைவாளின் தேசுபார்!



பூட்டிய வில்லுங் குறிவைத்த பாணமும்

பொல்லாத பார்வையுங் கண்டதோ ? - உன்றன்

பொல்லாத பார்வையுங் கண்டதோ ?

வாட்ட மில்லாப்பயிர் மேயவந்த பசு

வாலைக் கிளப்பிக்கொண் டோடுதே - வெடி

வாலைக் கிளப்பிக்கொண் டோடுதே



கள்ளக் குணமுள்ள காக்கை உன்னைக்கண்டு

கத்திக் கத்திக் கரைந்தோடுமே - கூடிக்

கத்திக் கத்திக் கரைந்தோடுமே

நள்ளிரவில் வருகள்வனுனைக் கண்டு

நடுநடுங்கி மனம் வாடுமே - ஏங்கி

நடுநடுங்கி மனம் வாடுமே



ஏழைக் கமக்காரன் வேளைக் குதவிசெய்

ஏவற்காரன் நீயே யென்னினும் - நல்ல

ஏவற்காரன் நீயே யென்னினும்

ஆளைப்போலப் போலி வேடக்காரன் நீயே

ஆவதறிந்தன னுண்மையே - போலி

ஆவதறிந்தன னுண்மையே



தூரத்திலே யுனைக் கண்டவுட னஞ்சித்

துண்ணென் றிடித்ததென் நெஞ்சகம் - மிகத்

துண்ணென் றிடித்ததென் நெஞ்சகம்

சேரச் சேரப் போலி வேடக்காரனென்று

தெரிய வந்ததுன் வஞ்சகம் - நன்று

தெரிய வந்ததுன் வஞ்சகம்



சிங்கத்தின் தோலினைப் போர்த்த கழுதைபோல்

தேசத்திலே பலர் உண்டுகாண் - இந்தத்

தேசத்திலே பலர் உண்டுகாண்

அங்கவர் தம்மைக்கண் டேமாந்து போகா

அறிவு படைத்தனன் இன்றுநான் - உன்னில்

அறிவு படைத்தனன் இன்றுநான்.

Courtesy: http://paadal.blogspot.ca/2005/03/blog-post.html

ஓ! தமிழகமே

ஓ! தமிழகமே
ஈழத்தின் தாயகமே!
நாற்பதுகளில்
நீ இயற்றிய
சத்திய வேள்வியின்
புதிய பதிப்பு
இங்கே அச்சாகிறது!

நீ மூட்டிய
பெரு நெருப்பு
பொறியாயப் பறந்து
இங்கே -
புகைந்துகொண்டிருக்கிறது!
ஈழத்துத் தமிழர்களின்
இதய கீதம்
உலகெங்கும் எதிரொலிக்க
நீ மட்டும் -
செவிடாய் நடித்து
சனாதிபதிப் பரிசுக்கு
ஆசைப்பட்டாயோ!
***
தியாகப் பயிர்களின்
அறுவடையில்
சாதனை கண்ட
தமிழ் நாட்டில் -
தார்மீக நெஞ்சங்கள்
தூங்கிக்கொண்டா
இருக்கின்றன?
பத்திரிகா தர்மம்
போற்றுவார் இன்றிப்
பாழடைந்தா போயிற்று?
***
இந்த மண்ணின்
பிரகடனப்படுத்தாத
இராணுவ ஆட்சியில் -
இளைஞர்கள் இலகுவாய்
காணாமல் போகிறார்கள்!
துப்பாக்கிச் சனியங்களின்
அத்தாணி மண்டபத்தில்
துரோபதைகள் பலர்
துகிலுரியப்படுகிறார்கள்!
***
எந்த நேரத்திலும் -
எமது இல்லக் கதவுகள்
இடிக்கப்படலாம்!
உடன்பிறப்புகள் -
முற்றத்திலும் தெருவிலுமாய்
இழுத்தெறியப்படலாம்!
இராணுவ மடாலயங்களில்
உயிர் போகாதபடிக்கு
உதைக்கப்படலாம்!
ஆண் உறுப்புகள் -
உருக்குக் கம்பிகளால்
துளைக்கப்படலாம்!
வௌவ்வாலாய்த் தொங்கவிட்டு
மிளகாய்த் தூளால்
முழுக்காட்டப்படலாம்!
வாய்க்கால் ஓரங்களிலும்
வயல் வெளிகளிலும்
தெரு நாய்களாய்ச்
சுடப்படலாம்!
நகரங்கள் -
பொலிஸ் காடையர்களால்
பொசுக்கப்படலாம்!
***
இது -
புதிய பரணிகளுக்கு
பிள்ளையார் சுழி
போடப்படும்
பாரதிகள் சகாப்தம்!
சிறைச்சாலைச் சுவர்கள்
புறநானூறு பாடுகின்ற
புதியவர்கள் சகாப்தம்!
***
இங்கே -
எமது சரித்திரம்
செந்நீரால் எழுதப்படுகின்றது!
தமிழகமே!
இதை நீ
தெரிந்து கொண்டதாய்க்
காட்டிக் கொண்டாலே போதும்!

1975
---