Oct 3, 2013

காதலிலிருந்து கவிதைக்கு


உல்லாசம் என்ற சொல்லை
உருக்கித் தட்டி
மினுக்கிப் பார்த்தால்
இளைஞன் என்று வருமல்லவா?

அதுபோல் –

கனவு, கண்கள்
தோல்வி, தாடி
என்பவற்றை
இறுக்கி முறுக்கி
இணைத்துப் பார்த்தால்
காதல் என்று வருமல்லவா?

மேலும் –

காதல் என்ற சொல்லிலிருந்து
தோல்வி என்ற சொல்லைக்
கூட்டிக் கழித்துப்
பெருக்கிப் பிரித்துப் பார்த்தால்
கவிதை என்று வருமல்லவா?

-------

No comments:

Post a Comment