Oct 3, 2013

சுடலை ஞானம்


நல்லவனென்று பெயரெடுக்க
நாளெல்லாம் முயன்று பார்த்தேன்,
இறக்கப்போகும் வயதில்தான்
உண்மையை அறிந்துகொண்டேன்.
நல்லவற்றைச் செய்துதான்
நல்லவனாக வேண்டியதில்லை.
கெட்ட செயலெதுவும்
செய்யாதிருந்தாலே போதும்,
நல்லவனென்ற பெயர்
நாளடைவில் வந்துவிடும்!

---------

No comments:

Post a Comment