Nov 23, 2012

நீறு பூத்த நெருப்பு




நீறு பூத்த நெருப்பு

பாலைவனத்தின்
பகல் வெப்பத்தை
உணர்ந்ததுண்டா
பாடல்களில்
ஒப்பாரி மட்டுமே
பாடுவோரைக் கண்டதுண்டா?

றோடும் அழகை
இரசித்திருப்பாய் நீ
குருதி ஓடிய ஆறைக்
கண்டிருப்பாயா?

சுதந்திரம் அற்றவர்க்கு
வாசல் கதவு எதற்கு?
செல்லுமிடம் அற்றவர்க்கு
சுதந்திரம் எதற்கு?

ன்று
சுதந்திரம் கேட்டவனைக்
கொன்றவன் குற்றவாளி,
நாளை
கொன்றவனைக் கொன்றவன்
குற்றவாளி!

ஸ்ரேலுக்கு மட்டுமே சொரியும்
ஐநாவின் விந்து அதில்
இலங்கைக்கும் கொஞ்சம்
சுவறுவது முண்டு.

காடையர் அரசு
குதூகலிக்கிறது
கோத்தபாயாவின்
சால்வைத் தலைப்பில்
கைதுடைப்பாளாம் கிலாரி!

ரிகிற நாட்டில்
பிடுங்குகிறது இந்தியா அது
இலங்கையில் செய்வது
வியாபாரம் அல்ல
விபச்சாரம்!

ன்மோகன் சிங்க் தன்
மூளையில் முளைக்கும்
முட்களை மறைக்கவா
மூடிக் கட்டுகிறார்?

ஞ்சகச் சிரிப்பை
மறைக்கலாமென்றா
தாடி வளர்க்கிறார் இந்த
சிங்க் போலச்
சீக்கியர் எவரும்
சீர்கெட்டுப் போனதில்லை!

சீனாக்காரன் சங்கதி
தெரிந்த விஷயம்தானே!
தண்டவாளம் போடவந்தால்
திரும்பிப் போகமாட்டான்
தெருவைக் கட்டவந்தால்
தெருவையே வாங்கிவிடுவான்.

சீனாவில் வீட்டுக்கொரு எஞ்சினியர்
எங்களுக்கு வீடென்பதே கிடையாது!

புரிந்துகொள்,
பெற்றோல் இல்லாத
நாட்டின் சார்பில்
போர் தொடுக்காது அமெரிக்கா எனவே
புட்டிசம் போடுவதில்
பயனில்லை நண்பா!

ட்டாவாவும் வாஷிங்டனும்
ஒன்றென்று அறிந்துகொள்
இஸ்ரேலின் கைப்பொம்மைகள்
இவைகளேன்று தெரிந்துகொள்!

பாமாவின் நாக்கேன் கறுத்துப்போயிருக்கிறது
இஸ்ரேலியரின் பூட்சுகளை நக்குவதாயிருக்கலாம்.

ப்கானிஸ்தானில் குழந்தைகள்
அன்னையின் தாலாட்டுக்குப் பதில்
துப்பாக்கி வெடிகளைக் கேட்டே
தூங்கப் பழகிக்கொண்டார்கள்.



No comments:

Post a Comment