Nov 23, 2012

என்னவளே!





இங்கேயோர் அற்புதம்
இன்று நிகழ்ந்தது
இவள் சிரித்ததைக் கண்டதும்
சூரியன் மறைந்துபோனான்.

இவள் நிமிர்ந்து என்னைப்
பார்த்ததைக் கண்டதும் முழுமதி
முகில்களை அள்ளி
மூடிக்கொண்டாள்.

மறைத்துக் கொண்டவை
மலர்க் கதவுகள்தானே
திறந்துகொள்ள நான்
தென்றலை அனுப்புவேனே!

முதன்முறை உனை நான்
தொட்டபோதேன் மௌனமாயிருந்தாய்
அன்றே எனது முகத்தில்
ஓங்கி அடித்திருந்தால்
இவ்வளவுக்கு நான் கெட்டிருக்கமாட்டேன்.

முதன் முறை உன்
காதலைக் கேட்டபோது
அன்றே ஆமென்று சொல்லியிருந்தால்
இன்றைக்கு நான் எவ்வளவோ
நல்லவனாய் வந்திருப்பேன்.

தடக்கி விழுவதிலும்
ஒரு சுகமுண்டு, அன்பே
தடக்குவது உன் முந்தானை
விழுவது உன் மடியின்மீதென்றால்.

வட்டக் கழுத்தைவிட்டு
எட்டிப் பார்க்குமோவென்று
ஒவ்வொரு சொல்லின் நடுவிலும்
இழுத்து விடுவாயே சேலையை!
எத்தனையாம் ஆண்டில்
இருக்கிறாய் எனக் கேட்டால்
இல்லாத கோபமெல்லாம்
காட்டி முறைப்பாய்.

என் பெயரை இவ்வளவு
அழகாக உச்சரிக்க
எங்கே நீ கற்றுக்கொண்டாய்?
உலகம் முழுவதும்
அழகர்கள் மலிந்திருக்க
என்மீதேன் பற்றுக்கொண்டாய்?

நீ சங்கீதம் படிக்கிறாயாம்
நீ வாழும் தெருவில்
வீடுகளெல்லாம் விலையேறிப்போனது
ஏனென்று இப்போது விளங்குகிறது.

ஐஸ்கிரீமைக் கண்டுபிடித்தபோது
நீ பிறந்திருந்தால் அதற்கு
உன்பெயரை வைத்திருப்பார்கள்.

பெற்றார் ஆசிரியர் சங்கத்தில்
உன்பெயரைப் பதிவுசெய்தேன்
பிள்ளையின் பெயர் கேட்டார்கள்
என்பெயரைக் கொடுத்துவிட்டேன்.

ஒருகோடு மட்டுமே கீறி
ஓவியமாக்கு என்றேன்
இரு நுனிகளையும் இணைத்து
இதயம் ஆக்கிவிட்டாய்.

இடுப்பில் மட்டும்
ஒரு ஏக்கர் தோட்டம்
பசளை கூடியதால்
பூத்துச் சொரிகிறது.

வயிற்று மேட்டில்
வழுக்கிவிழும் வியர்வை முத்து
தொடுத்து மாலையாக்க
தேவதை என்னை விட்டால்தானே!

வயிற்று மேட்டை வாடைக்கெடுத்து
ஆப்பிள் தோட்டம் போடலாமென்றால்
எக்கச்சக்கமாய் வாடகை கேட்கிறாள்.


No comments:

Post a Comment