Mar 5, 2016

ராஜாஜியின் ராஜகுமாரன்

Srikandarajah கங்கைமகன்
November 13, 2015

கடந்த சில மாதங்களுக்கு முன் என்னைப்பற்றிய ஓர் அடையாள அறிமுகம் சிறிலங்கா தொலைக் காட்சியில் தூவாணம் என்ற நிகழ்வில் இடம்பெற்றிருந்தது. அதைப் பார்த்த நண்பர் ராஜாஜி அவர்கள் கங்கைமகனுக்கு ஏன்; அறிமுகம் என்று அந்த நிகழ்வின் பின்னூட்டத்தில் எழுதி இருந்தார். உலகளாவிய ரீதியில் வெளியீடு செய்யப்படவுள்ள இவரது நூலை நான் ஆய்வு செய்ய வேண்டும். அதனூடாக உலகத்து மக்கள் என்னை அறிந்து கொள்ளட்டும் என்று அவர் நினைத்தாரோ என்னவோ. வாழ்த்துக்கள். இருந்தும் அவரது வெளிச்சத்தில் விழும் நிழலுக்குள் என்னையும் நான் தேடிப்பார்க்கின்றேன்;.
.
ஈழத் தமிழன் தன் இருப்புகளைத் தொலைத்துவிட்டு இருப்பவற்றைக் கட்டிக்காப்பாற்றிக் கொள்ளத் தனக்கென்று ஓர் முகமூடியை அதுவும் அரை விலைக்கு வாங்கி அணிந்துகொண்டு உலகம் முழுக்க அங்கலாய்த்துக் கொண்டு திரியும் காலமிது. நாட்டை இழந்து, மொழியை மறந்து, உறவுகளைப் பிரிந்து இழக்க ஒன்றுமே இல்லாத நிலையில் வெளிநாட்டுத் தமிழர் தாம் வாழ்வை நினைக்காமல் வேரறுந்த விழுதுளாய் வாழத் தொடங்கிய புலம்பெயர் வாழ்வில் குன்றின் விளக்காய்ச் சில மனிதர்கள் .ராஜாஜி அவர்களைப்போல் வாழத்தான் செய்கின்றார்கள்.
.
தன்னைப் பலவீனப் படுத்தியாவது மற்றவர்களின் பலத்தை முன்னுக்குக் கொண்டுவரும் ஆற்றல் மிக்கவர் நண்பர் ராஜாஜி அவர்கள் என்பதனை அவரது எழுத்துகளில் மட்டும் அல்ல நேரடி வாழ்விலும் கடைப்பிடிப்பவர் என்பதனைப் பலவடிவங்களில் பலரிடம் வெளிப்படுத்தி இருப்பதைப் பார்த்துள்ளேன். 40 வருட அவரது இலக்கிய வாழ்வில் 4 வருடங்களுக்குக்குறைவாகவே என்னுடன் அறிமுகமாகியவர் இந்த நூலாசிரியர்.
.
தனக்கே உரிய பாணியில் கதைகள் சொல்லுவது ஒரு வகை.. பிறருக்கு உகந்த பாணியில் சொலலுவது இன்னொரு வகை. ஆனால் இரண்டையும் குழைத்து இன்றைய உலகிற்கு ஏற்ற பாணியில் சொல்லி இருப்பது அனைத்தும் அவரது 7ம் அறிவியல் சார்ந்த அனுபவ உண்மைகள் ஆகும். .
.
.மனம் திறத்தல், மனம் திருப்புதல் என்ற உளவியல் கோட்பாட்டின் அடிப்படையில் அவரது ஆழ்மனது அவரிடமே தமிழ்ப் பிச்சைகேட்டுக் கேட்டு இந்த இராஜ குமாரனை வெளிக் கொண்டு வந்திருதுக்கின்றது. இவர் கடன்பட்டது தமிழிடம் என்றால் அந்தமொழி இவரிடம் தன்னை அழகு படுத்தியது இந்தச் சிறுகதைத் தொகுப்பில்தான்.
.
.மானுட மனத்தின் மற்றடற்ற விருப்புக்களைக் கட்டற்ற தேவைக்குள் ஈர்த்துககொண்ட நடைமுறைச் சமுதாயத்தின் ஒவ்வொரு நிலைகளையும் நுணுக்கமுறக் கண்டறிந்து ஆக்கமுற்று ஆர்ப்பரிக்கின்றது இந்த முத்து. காலத்தை இவர் எழுதி வரலாற்றை வாழவைபதைப்போலவே வரலாறும் தன் காலத்தில் இவரது எழுத்துக்களை நிட்சயமாக வாழவைக்கும்.
.
கடல் கடந்தான் தமிழன், கற்பூர தீபம் கண்டான் .இறைவன் என்பதுபோல விட்டகுறையையும், தொட்ட குறையையும் தொடர்ந்து தாம் வாழும் நாட்டில் கட்டிக்காப்பவர்கள் தமிழர்கள். அந்த வகையில் ஈழத்தில் விட்ட எழுத்தின் குறையைத் தான் வாழும் கனடிய நாட்டில் தொடரந்து செய்பவர். அப்பால் விடுபட்டுப்போன எழுத்து வடிவங்களையும், பேச்சு வடிவங்களையும் நடைமுறையில் அமைத்துக் காட்டி வாசிப்பவர்களை ஈழத்தின் அந்தந்த இடங்களில் உட்காரவைத்து விருந்து படைத்திருக்கும் இந்த எழுத்தாளன் பழமை பேணுவதற்குள் சென்று புதுமைகளை மெதுமையாகக் காதலி காதிற்குள் சொல்லும் இரகசியம்போல் இனிப்பாக்கியுள்ளார். அதனால் நூலைத் திறந்ததும் மூடமனமின்றி விரித்தபடி வைத்துவிட்டு, வந்துவந்து பார்த்தபடி வாசித்தும் பழக்கப்பட்டவன் நான்.
.
எதிரிகள் விடும் அம்புகளுக்காய் இவரும் எதிர்த்து அம்புகள் செய்வதில்லை. மாறாகக் கேடையங்களைச் செய்து தன்னையும் பாதுகாத்து எதிரிகள் இருந்தால் அவர்களையும் இன்முகம் காட்டி நண்ராக்குவதே இவரது பெருங்குணம். உள்ளங்களைக் கவர்ந்து நண்பர்களையும் , கலை, இலக்கிய அன்பர்களையும் தன்சிறையில் எப்பவும் பத்திமாக வைத்திருப்பவர்.
.
.இந்த நூலில் தொகுக்கப்பட்டிருக்கும் அத்தனை சிறுகதைகளும் உலகியல் வாழவின் வழுமியங்களோடு தங்களை இணைத்துக்கொண்டு தடங்கலற்றுச் செல்கின்றன. கிராமம், சமூகம், உறவுகள் தத்துவங்கள் எனச் சமூக அங்கங்களைக் கிளைபிரித்துக் காடட்டி ஒவ்வொரு கிளைக்கும் மகுடம்சூட்டி மக்களை இனம்காண வைத்துள்ளார் இந்த எழுத்தாளர்.
.
.காதல் இரசனையை வள்ளுவர் அனிச்சத்திற்கு ஒப்பிட்டார். ஆனால் இந்த எழுத்தாளர் அதைவிட மென்மையாகப பல இடங்களி;ல பல பக்கங்களை எம்மைத் தன்னுடன் நகர்த்தியுள்ளார். தையல்போட நூல் கிடைக்காத வறுமையின் அடிமட்டத்தில் தன் கிழிந்த பாவாடைக்கு முடிச்சுப் போட்டுக் கிலுட்டு மூக்குத்தியைக் கடற்கரையில் தொலைத்துக் காதல் கொண்டவர்கள் இன்றும் அந்த மணணில் மிகவும் சந்தோஷமாக வாழ்கின்றார்கள்.
.
.அடுப்படி ருசியும், அரிசிப்பல் சிரிப்பும் காட்டிக் காப்புக்கைச் சாப்பாடும், சங்கத் தமிழ் சொன்ன களவியற் பண்பிற்குச் சற்றும் மாறாது அகத்திணை ஒழுக்கங்களை அள்ளி வீசும் ஆற்றலை எழுதுவதில் இவரிடம் தோற்றவர்கள் ஏராளம். தன் முகவுரையில் காதலையும், செக்சையும் அள்ளி மெழுகிகிருப்பதாகப் பலர் பேசக்கூடும் என்று எழுதியிருக்கின்றார். என்னைப் பொறுத்த வரையில் அது சலனம் இன்றியே கதைகளில் பயணிக்கின்றன என்பதுவே உண்மையாகிறது.
.
தன் அனுபவங்களைப் பெரிசுபடுத்திக் கொள்ளாமல் "குதிரை இல்லாத ராஜகுமாரன்" என்ற சிறுகதையில் ஒரு தலைமைப் பாத்திரத்தை அவன் என்று அழைக்கின்றார். இந்த அவன் யாராகஇருக்கும் என்று யோசித்துப் பாரத்தேன். அது இவராகத்தான் இருக்குமோ என்ற சந்தேகம் எனக்கு......அதில் வரும் அவன் புகையிரதம் வெளிக்கிட்டதும் ஓடி வந்து ஏறுகிறான் என்று குறிப்பிட்டிருப்பார். அந்தக்காலத்தில் கொழும்பில் அப்படிப் பிசியாக இருந்தவர் இவராகத்தான் இருக்க முடியும். இதன் காரணங்கள் இவர்தான் அந்த ராஜகுமாரனோ என்று எனக்கு எண்ணத் தோன்றுகின்றது. இன்னொரு கதையில் வரும் இவன் என்பதுவும் அவர்தானோ?
.
.இந் நூலில் தொகுக்கப்பட்டிருக்கும் அனைத்துக் கதைகளில் இருந்தும் சிலவற்றை உதாரணமாகக் கூறிக் காட்டுவது மற்றைய கதைகளின் தரத்தைக் குறைத்துவிடும் என்று வாசகர்கள் எண்ணிவிடலாம் என்பதற்காக முழு நூலின் பண்பையும் எனதுபோக்கில் உங்களுடன் பகிர்ந்துள்ளேன்.
.
கங்கைமகன் என்பது ஒரு பல்கலைக் கழகமாக இருந்தால் ஒவ்வொரு கதைக்கும ஒவ்வொரு முனைவர் பட்டத்தைப் பெறும் தகுதியைத் திரு ராஜாஜி ராஜகோபாலன் அவர்கள் பெற்றிருப்பார் என்பது வெள்ளிடை மலையாய் நிமிர்ந்து நிற்கின்றது. ஒரு மனிதனின் ஆக்கம் ஒருவனை மனிதன் ஆக்கும் என்ற எனது கருத்துப்படி இவரது கதைகள் பலரை மனிதர்கள் ஆக்கும் என்பதுவே எனது எண்ணமாகும்.
.
.இது எனது முடிந்த அளவிலான ஆய்வே தவிர முழுமையான ஆய்வு அல்ல என்பதனை எனது கருத்தாகவைத்து இவர் மேலும் பல நூல்களை வெளியிட்டுத் தரணியில் தனியிடம் பெறவேண்டும் என்பதுவே என் பேரவாவாகும்.
.
அன்புடன்
கங்கைமகன்
14.11.2015

ராஜாஜியின் ராஜகுமாரன்

Srikandarajah கங்கைமகன்
November 13, 2015

கடந்த சில மாதங்களுக்கு முன் என்னைப்பற்றிய ஓர் அடையாள அறிமுகம் சிறிலங்கா தொலைக் காட்சியில் தூவாணம் என்ற நிகழ்வில் இடம்பெற்றிருந்தது. அதைப் பார்த்த நண்பர் ராஜாஜி அவர்கள் கங்கைமகனுக்கு ஏன்; அறிமுகம் என்று அந்த நிகழ்வின் பின்னூட்டத்தில் எழுதி இருந்தார். உலகளாவிய ரீதியில் வெளியீடு செய்யப்படவுள்ள இவரது நூலை நான் ஆய்வு செய்ய வேண்டும். அதனூடாக உலகத்து மக்கள் என்னை அறிந்து கொள்ளட்டும் என்று அவர் நினைத்தாரோ என்னவோ. வாழ்த்துக்கள். இருந்தும் அவரது வெளிச்சத்தில் விழும் நிழலுக்குள் என்னையும் நான் தேடிப்பார்க்கின்றேன்;.
.
ஈழத் தமிழன் தன் இருப்புகளைத் தொலைத்துவிட்டு இருப்பவற்றைக் கட்டிக்காப்பாற்றிக் கொள்ளத் தனக்கென்று ஓர் முகமூடியை அதுவும் அரை விலைக்கு வாங்கி அணிந்துகொண்டு உலகம் முழுக்க அங்கலாய்த்துக் கொண்டு திரியும் காலமிது. நாட்டை இழந்து, மொழியை மறந்து, உறவுகளைப் பிரிந்து இழக்க ஒன்றுமே இல்லாத நிலையில் வெளிநாட்டுத் தமிழர் தாம் வாழ்வை நினைக்காமல் வேரறுந்த விழுதுளாய் வாழத் தொடங்கிய புலம்பெயர் வாழ்வில் குன்றின் விளக்காய்ச் சில மனிதர்கள் .ராஜாஜி அவர்களைப்போல் வாழத்தான் செய்கின்றார்கள்.
.
தன்னைப் பலவீனப் படுத்தியாவது மற்றவர்களின் பலத்தை முன்னுக்குக் கொண்டுவரும் ஆற்றல் மிக்கவர் நண்பர் ராஜாஜி அவர்கள் என்பதனை அவரது எழுத்துகளில் மட்டும் அல்ல நேரடி வாழ்விலும் கடைப்பிடிப்பவர் என்பதனைப் பலவடிவங்களில் பலரிடம் வெளிப்படுத்தி இருப்பதைப் பார்த்துள்ளேன். 40 வருட அவரது இலக்கிய வாழ்வில் 4 வருடங்களுக்குக்குறைவாகவே என்னுடன் அறிமுகமாகியவர் இந்த நூலாசிரியர்.
.
தனக்கே உரிய பாணியில் கதைகள் சொல்லுவது ஒரு வகை.. பிறருக்கு உகந்த பாணியில் சொலலுவது இன்னொரு வகை. ஆனால் இரண்டையும் குழைத்து இன்றைய உலகிற்கு ஏற்ற பாணியில் சொல்லி இருப்பது அனைத்தும் அவரது 7ம் அறிவியல் சார்ந்த அனுபவ உண்மைகள் ஆகும். .
.
.மனம் திறத்தல், மனம் திருப்புதல் என்ற உளவியல் கோட்பாட்டின் அடிப்படையில் அவரது ஆழ்மனது அவரிடமே தமிழ்ப் பிச்சைகேட்டுக் கேட்டு இந்த இராஜ குமாரனை வெளிக் கொண்டு வந்திருதுக்கின்றது. இவர் கடன்பட்டது தமிழிடம் என்றால் அந்தமொழி இவரிடம் தன்னை அழகு படுத்தியது இந்தச் சிறுகதைத் தொகுப்பில்தான்.
.
.மானுட மனத்தின் மற்றடற்ற விருப்புக்களைக் கட்டற்ற தேவைக்குள் ஈர்த்துககொண்ட நடைமுறைச் சமுதாயத்தின் ஒவ்வொரு நிலைகளையும் நுணுக்கமுறக் கண்டறிந்து ஆக்கமுற்று ஆர்ப்பரிக்கின்றது இந்த முத்து. காலத்தை இவர் எழுதி வரலாற்றை வாழவைபதைப்போலவே வரலாறும் தன் காலத்தில் இவரது எழுத்துக்களை நிட்சயமாக வாழவைக்கும்.
.
கடல் கடந்தான் தமிழன், கற்பூர தீபம் கண்டான் .இறைவன் என்பதுபோல விட்டகுறையையும், தொட்ட குறையையும் தொடர்ந்து தாம் வாழும் நாட்டில் கட்டிக்காப்பவர்கள் தமிழர்கள். அந்த வகையில் ஈழத்தில் விட்ட எழுத்தின் குறையைத் தான் வாழும் கனடிய நாட்டில் தொடரந்து செய்பவர். அப்பால் விடுபட்டுப்போன எழுத்து வடிவங்களையும், பேச்சு வடிவங்களையும் நடைமுறையில் அமைத்துக் காட்டி வாசிப்பவர்களை ஈழத்தின் அந்தந்த இடங்களில் உட்காரவைத்து விருந்து படைத்திருக்கும் இந்த எழுத்தாளன் பழமை பேணுவதற்குள் சென்று புதுமைகளை மெதுமையாகக் காதலி காதிற்குள் சொல்லும் இரகசியம்போல் இனிப்பாக்கியுள்ளார். அதனால் நூலைத் திறந்ததும் மூடமனமின்றி விரித்தபடி வைத்துவிட்டு, வந்துவந்து பார்த்தபடி வாசித்தும் பழக்கப்பட்டவன் நான்.
.
எதிரிகள் விடும் அம்புகளுக்காய் இவரும் எதிர்த்து அம்புகள் செய்வதில்லை. மாறாகக் கேடையங்களைச் செய்து தன்னையும் பாதுகாத்து எதிரிகள் இருந்தால் அவர்களையும் இன்முகம் காட்டி நண்ராக்குவதே இவரது பெருங்குணம். உள்ளங்களைக் கவர்ந்து நண்பர்களையும் , கலை, இலக்கிய அன்பர்களையும் தன்சிறையில் எப்பவும் பத்திமாக வைத்திருப்பவர்.
.
.இந்த நூலில் தொகுக்கப்பட்டிருக்கும் அத்தனை சிறுகதைகளும் உலகியல் வாழவின் வழுமியங்களோடு தங்களை இணைத்துக்கொண்டு தடங்கலற்றுச் செல்கின்றன. கிராமம், சமூகம், உறவுகள் தத்துவங்கள் எனச் சமூக அங்கங்களைக் கிளைபிரித்துக் காடட்டி ஒவ்வொரு கிளைக்கும் மகுடம்சூட்டி மக்களை இனம்காண வைத்துள்ளார் இந்த எழுத்தாளர்.
.
.காதல் இரசனையை வள்ளுவர் அனிச்சத்திற்கு ஒப்பிட்டார். ஆனால் இந்த எழுத்தாளர் அதைவிட மென்மையாகப பல இடங்களி;ல பல பக்கங்களை எம்மைத் தன்னுடன் நகர்த்தியுள்ளார். தையல்போட நூல் கிடைக்காத வறுமையின் அடிமட்டத்தில் தன் கிழிந்த பாவாடைக்கு முடிச்சுப் போட்டுக் கிலுட்டு மூக்குத்தியைக் கடற்கரையில் தொலைத்துக் காதல் கொண்டவர்கள் இன்றும் அந்த மணணில் மிகவும் சந்தோஷமாக வாழ்கின்றார்கள்.
.
.அடுப்படி ருசியும், அரிசிப்பல் சிரிப்பும் காட்டிக் காப்புக்கைச் சாப்பாடும், சங்கத் தமிழ் சொன்ன களவியற் பண்பிற்குச் சற்றும் மாறாது அகத்திணை ஒழுக்கங்களை அள்ளி வீசும் ஆற்றலை எழுதுவதில் இவரிடம் தோற்றவர்கள் ஏராளம். தன் முகவுரையில் காதலையும், செக்சையும் அள்ளி மெழுகிகிருப்பதாகப் பலர் பேசக்கூடும் என்று எழுதியிருக்கின்றார். என்னைப் பொறுத்த வரையில் அது சலனம் இன்றியே கதைகளில் பயணிக்கின்றன என்பதுவே உண்மையாகிறது.
.
தன் அனுபவங்களைப் பெரிசுபடுத்திக் கொள்ளாமல் "குதிரை இல்லாத ராஜகுமாரன்" என்ற சிறுகதையில் ஒரு தலைமைப் பாத்திரத்தை அவன் என்று அழைக்கின்றார். இந்த அவன் யாராகஇருக்கும் என்று யோசித்துப் பாரத்தேன். அது இவராகத்தான் இருக்குமோ என்ற சந்தேகம் எனக்கு......அதில் வரும் அவன் புகையிரதம் வெளிக்கிட்டதும் ஓடி வந்து ஏறுகிறான் என்று குறிப்பிட்டிருப்பார். அந்தக்காலத்தில் கொழும்பில் அப்படிப் பிசியாக இருந்தவர் இவராகத்தான் இருக்க முடியும். இதன் காரணங்கள் இவர்தான் அந்த ராஜகுமாரனோ என்று எனக்கு எண்ணத் தோன்றுகின்றது. இன்னொரு கதையில் வரும் இவன் என்பதுவும் அவர்தானோ?
.
.இந் நூலில் தொகுக்கப்பட்டிருக்கும் அனைத்துக் கதைகளில் இருந்தும் சிலவற்றை உதாரணமாகக் கூறிக் காட்டுவது மற்றைய கதைகளின் தரத்தைக் குறைத்துவிடும் என்று வாசகர்கள் எண்ணிவிடலாம் என்பதற்காக முழு நூலின் பண்பையும் எனதுபோக்கில் உங்களுடன் பகிர்ந்துள்ளேன்.
.
கங்கைமகன் என்பது ஒரு பல்கலைக் கழகமாக இருந்தால் ஒவ்வொரு கதைக்கும ஒவ்வொரு முனைவர் பட்டத்தைப் பெறும் தகுதியைத் திரு ராஜாஜி ராஜகோபாலன் அவர்கள் பெற்றிருப்பார் என்பது வெள்ளிடை மலையாய் நிமிர்ந்து நிற்கின்றது. ஒரு மனிதனின் ஆக்கம் ஒருவனை மனிதன் ஆக்கும் என்ற எனது கருத்துப்படி இவரது கதைகள் பலரை மனிதர்கள் ஆக்கும் என்பதுவே எனது எண்ணமாகும்.
.
.இது எனது முடிந்த அளவிலான ஆய்வே தவிர முழுமையான ஆய்வு அல்ல என்பதனை எனது கருத்தாகவைத்து இவர் மேலும் பல நூல்களை வெளியிட்டுத் தரணியில் தனியிடம் பெறவேண்டும் என்பதுவே என் பேரவாவாகும்.
.
அன்புடன்
கங்கைமகன்
14.11.2015

மண்வாசனையை மறவாத ராஜாஜி

புனிதா கங்கைமகன்
November 10, 2015
மதிப்பிற்குரிய முகநூல் நண்பர் திரு ராஜாஜி ராஜகோபாலன் அவர்கள் தன் முகநூல் நண்பர்களைக் கௌரவப் படுத்துவதிலும் நட்பைத் தங்கவைத்துக் கொள்வதிலும் தனக்கென ஒரு சிறப்பு இயல்பை வைத்துக் கொள்பவர். நாசூக்காவும், நளினமாகவும் கதைகள்பேசி நட்பின் ஆழங்களைத் தன் அன்பின் அளவுகோல்களாலே வரையறை செய்தும் வாழ்பவர்.
3 சகாப்தங்களாகத் தமிழ் இலக்கியத்துள் தன்னைப் புடம் போட்டு மீட்டெடுத்திருக்கும் இவர் தன்னை ஒரு கவிஞன் என்றோ, தன்னை ஒரு எழுத்தாளன் என்றோ தனக்குத்தானே பெருமிதம் கொண்டது கிடையாது. கடந்த பல வருடங்களுக்கு மேலாக அவரது இலக்கியப் படைப்புகளைப் பலவடிவங்களில் ஆய்ந்தும், அறிந்தும், விமர்சித்தும், நுகர்ந்தும் சென்றிருக்கின்றேன். கவிதை நயமும், கருப்பொருள் செறிவும், இலக்கிய நயமும், புதிய பாணியில் அவரது படைப்புக்களில் ஆற்றல் மிக்கவைகளாக மேலோங்கி நிற்பதைக் காணலாம்.
புலம்பெயர் வாழ்வின் சலனங்களோடு தன் இருப்பைத் தொலைத்து விடாமல் தான் வாழும் நாட்டிலும் தமிழனின் சுவடுகள் ஆழமாகப் பதியம் வைக்கப்பட வேண்டும் என்பதில் ஆணித்தரமான கருத்தும் ஒருமைப்பாடும் உடையவர் என்பதனை அவரின் செயற்பாடுகள் மூலமாகவே நாம் தெரிந்து கொள்ளலாம்.
அந்தவகையில் அண்மையில் ஈழத்தில் வெளியீடு செய்யப்பட்ட அவரது "குதிரை இல்லாத ராகுமாரன்" என்ற நூல் என்கரம் கிட்டியது. வாழ்வின் அர்த்தங்களைத் தேடி ஓடும் மக்களுக்காக மகத்தானதொரு படைப்பாகவே இந்நூல் தோற்றம் பெறுகின்றது.
மன்னனும் மாசறக் கற்றோனும சீர்தூக்கின்
மன்னனிற் கற்றோன் சிறப்புடையோன்
மன்னற்குத் தன்தேச மல்லாற் சிறப்பில்லை
கற்றோற்குச் சென்ற இடமெல்லாஞ் சிறப்பு
எவ்வளவு பெரிய பாராளும் அரசனாக இருந்தாலும் அவனுக்குத் தன் நாட்டில் மட்டும்தான் சிறப்பு. ஆனால் கற்றவர்களுக்குச் சென்ற இடம் எல்லாம் சிறப்பு என்பதனைப் பலவழிகளிலும் வாசகர்களுக்குப் புரிய வைத்திருப்பதுவே இந் நூலின் சிறப்பம்சமாகும்.
தாய்நாட்டு அசல் மண்வாசனைகளைத் தன்கதைகளினூடு மிகவும் துல்லியமான முறையில் உலகத் தமிழர்களின் கரங்களில் ஒப்புவித்திருப்பது சமூக மாற்றத்தில் ஆசிரியர் கொண்டுள்ள அக்கறையின் பிரதிபலிப்பாகவே தென்படுகின்றன.
இவரது சிறுகதைகள் யாவும் தாம் வாழ்ந்த அல்லது வாழும் காலத்தைச் சித்தரித்துக் காட்டும் காலத்தின் சமூகக் கண்ணாடியாகவே இதனை வாசிப்பவர்கள் கருத்தினில் கொள்வர்.
அனைத்துக் கதைகளின் பின்புலங்கள் யாவும் ஆசிரியரைப் பற்றிய ஆழமான ஆய்வை வேண்டி நிற்பதோடு மட்டும் அல்லாமல் மொழி மீதுள்ள அவரின் ஆழுமையும் புலப்படுகின்றது.
தொழில்நுட்ப இவ்வுலகில் பொருள்நுட்பம் தேடும் மக்கள் மத்தியில் மதிநுட்பம் படைத்த இந்த ஆசிரியர் தமிழின் ஆழம்வரை சென்று 100 வருடங்களுக்கு அப்பால் புழக்கத்தில் இருந்த பிரதேச மொழித் தமிழ்ச் சொற்களை வாரி எடுத்து வழியெங்கும் தூவியிருப்பது அவரின் தெளிவில் நாம் காணும் தேடலாகும்.
கதைகளைப் படிக்கின்றபோது இயல்பாகவே எழுகின்ற ஆர்வத்தின் அடிப்படையிலேயே இக் கதைகளுக்கான விமர்சனம் எழுத வேண்டும் என்ற எண்ணம் என்னுள் எழுந்தது.
இவரது "குதிரை இல்லாத ராஜகுமாரன்" என்ற தொகுப்பின் அனைத்துக் கதைகளையும் நான் வாசித்திருந்தாலும் இவரது எழுத்துக்களுக்கு ஒரு ஆரோக்கியமான சிறந்த ஆய்வையோ, அறிமுகத்தையோ என்னால் கூறிவிட முடியாது. அதனால் நூல் ஆய்வுகளைச் செய்வதில் மிகவும் கைதேர்ந்தவராகிய கங்கைமகனிடமே இந்நூலை ஒப்படைக்கிறேன்.
இதுபோன்ற இன்னும் பல நூல்களை நண்பர் ராஜாஜி ராஜகோபாலன் அவர்கள் வெளியிட வேண்டும் என்பதனை என் விருப்பமாக வைத்து விடைபெறுகின்றேன். வாழ்த்துக்கள்.
அன்புடன்
புனிதா கங்கைமகன்
10.11.2015

மண்வாசனையை மறவாத ராஜாஜி

புனிதா கங்கைமகன்
November 10, 2015
மதிப்பிற்குரிய முகநூல் நண்பர் திரு ராஜாஜி ராஜகோபாலன் அவர்கள் தன் முகநூல் நண்பர்களைக் கௌரவப் படுத்துவதிலும் நட்பைத் தங்கவைத்துக் கொள்வதிலும் தனக்கென ஒரு சிறப்பு இயல்பை வைத்துக் கொள்பவர். நாசூக்காவும், நளினமாகவும் கதைகள்பேசி நட்பின் ஆழங்களைத் தன் அன்பின் அளவுகோல்களாலே வரையறை செய்தும் வாழ்பவர்.
3 சகாப்தங்களாகத் தமிழ் இலக்கியத்துள் தன்னைப் புடம் போட்டு மீட்டெடுத்திருக்கும் இவர் தன்னை ஒரு கவிஞன் என்றோ, தன்னை ஒரு எழுத்தாளன் என்றோ தனக்குத்தானே பெருமிதம் கொண்டது கிடையாது. கடந்த பல வருடங்களுக்கு மேலாக அவரது இலக்கியப் படைப்புகளைப் பலவடிவங்களில் ஆய்ந்தும், அறிந்தும், விமர்சித்தும், நுகர்ந்தும் சென்றிருக்கின்றேன். கவிதை நயமும், கருப்பொருள் செறிவும், இலக்கிய நயமும், புதிய பாணியில் அவரது படைப்புக்களில் ஆற்றல் மிக்கவைகளாக மேலோங்கி நிற்பதைக் காணலாம்.
புலம்பெயர் வாழ்வின் சலனங்களோடு தன் இருப்பைத் தொலைத்து விடாமல் தான் வாழும் நாட்டிலும் தமிழனின் சுவடுகள் ஆழமாகப் பதியம் வைக்கப்பட வேண்டும் என்பதில் ஆணித்தரமான கருத்தும் ஒருமைப்பாடும் உடையவர் என்பதனை அவரின் செயற்பாடுகள் மூலமாகவே நாம் தெரிந்து கொள்ளலாம்.
அந்தவகையில் அண்மையில் ஈழத்தில் வெளியீடு செய்யப்பட்ட அவரது "குதிரை இல்லாத ராகுமாரன்" என்ற நூல் என்கரம் கிட்டியது. வாழ்வின் அர்த்தங்களைத் தேடி ஓடும் மக்களுக்காக மகத்தானதொரு படைப்பாகவே இந்நூல் தோற்றம் பெறுகின்றது.
மன்னனும் மாசறக் கற்றோனும சீர்தூக்கின்
மன்னனிற் கற்றோன் சிறப்புடையோன்
மன்னற்குத் தன்தேச மல்லாற் சிறப்பில்லை
கற்றோற்குச் சென்ற இடமெல்லாஞ் சிறப்பு
எவ்வளவு பெரிய பாராளும் அரசனாக இருந்தாலும் அவனுக்குத் தன் நாட்டில் மட்டும்தான் சிறப்பு. ஆனால் கற்றவர்களுக்குச் சென்ற இடம் எல்லாம் சிறப்பு என்பதனைப் பலவழிகளிலும் வாசகர்களுக்குப் புரிய வைத்திருப்பதுவே இந் நூலின் சிறப்பம்சமாகும்.
தாய்நாட்டு அசல் மண்வாசனைகளைத் தன்கதைகளினூடு மிகவும் துல்லியமான முறையில் உலகத் தமிழர்களின் கரங்களில் ஒப்புவித்திருப்பது சமூக மாற்றத்தில் ஆசிரியர் கொண்டுள்ள அக்கறையின் பிரதிபலிப்பாகவே தென்படுகின்றன.
இவரது சிறுகதைகள் யாவும் தாம் வாழ்ந்த அல்லது வாழும் காலத்தைச் சித்தரித்துக் காட்டும் காலத்தின் சமூகக் கண்ணாடியாகவே இதனை வாசிப்பவர்கள் கருத்தினில் கொள்வர்.
அனைத்துக் கதைகளின் பின்புலங்கள் யாவும் ஆசிரியரைப் பற்றிய ஆழமான ஆய்வை வேண்டி நிற்பதோடு மட்டும் அல்லாமல் மொழி மீதுள்ள அவரின் ஆழுமையும் புலப்படுகின்றது.
தொழில்நுட்ப இவ்வுலகில் பொருள்நுட்பம் தேடும் மக்கள் மத்தியில் மதிநுட்பம் படைத்த இந்த ஆசிரியர் தமிழின் ஆழம்வரை சென்று 100 வருடங்களுக்கு அப்பால் புழக்கத்தில் இருந்த பிரதேச மொழித் தமிழ்ச் சொற்களை வாரி எடுத்து வழியெங்கும் தூவியிருப்பது அவரின் தெளிவில் நாம் காணும் தேடலாகும்.
கதைகளைப் படிக்கின்றபோது இயல்பாகவே எழுகின்ற ஆர்வத்தின் அடிப்படையிலேயே இக் கதைகளுக்கான விமர்சனம் எழுத வேண்டும் என்ற எண்ணம் என்னுள் எழுந்தது.
இவரது "குதிரை இல்லாத ராஜகுமாரன்" என்ற தொகுப்பின் அனைத்துக் கதைகளையும் நான் வாசித்திருந்தாலும் இவரது எழுத்துக்களுக்கு ஒரு ஆரோக்கியமான சிறந்த ஆய்வையோ, அறிமுகத்தையோ என்னால் கூறிவிட முடியாது. அதனால் நூல் ஆய்வுகளைச் செய்வதில் மிகவும் கைதேர்ந்தவராகிய கங்கைமகனிடமே இந்நூலை ஒப்படைக்கிறேன்.
இதுபோன்ற இன்னும் பல நூல்களை நண்பர் ராஜாஜி ராஜகோபாலன் அவர்கள் வெளியிட வேண்டும் என்பதனை என் விருப்பமாக வைத்து விடைபெறுகின்றேன். வாழ்த்துக்கள்.
அன்புடன்
புனிதா கங்கைமகன்
10.11.2015

குதிரை இல்லாத ராஜகுமாரன் - மதிப்பீடுகள்

Sudarsan Books
September 24, 21015
குதிரை இல்லாத ராஜகுமாரன் (சிறுகதைகள்)
- ராஜாஜி ராஜகோபாலன்
எழுபதுகளிலான ஈழத்து எழுத்துலகப் பரப்பில் ஆழமாய்த் தடம் பதித்த படைப்பாளிகளில் ஒருவரான ராஜாஜி ராஜகோபாலன் அண்மைக் காலம்வரை எழுதியவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட பதினைந்து சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல்.
யாழ்ப்பாண மக்களின் வாழ்வியல் கோலங்களை அலாதியான வர்ணனைகளுடனும் நுட்பமான அவதானிப்புடனும் தனக்கேயுரிய தமிழ் நடையிலும் இடையிடையே எள்ளலும் காதலும் கனிவும் ததும்பும் சொற்சித்திரங்களுடனும் கதைமாந்தர்களின் உரையாடல்களில் இயல்பாகவே இடம்பெறும் பிரதேசப் பேச்சு வழக்கில் வாசகர் மனம் கட்டுண்டு வாசிப்புச் சுகத்தை முழுமையாய் நுகரும்படியாகவும் நுட்பமாய்க் கதையை நகர்த்திச் செல்லும் உத்தியில் ராஜாஜி கவர்ச்சியான தனது திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார்.
இந்த மண்ணின் பலவகையான களங்களிலும் வெவ்வேறு சூழல்களிலும் இவருக்கேயுரிய அதிசயிப்புடனான கண்ணோட்டத்திலும் மானுட நேசிப்பினூடான அணுகல் முறையிலும் கருக்கொண்ட இக்கதைகள் புலம்பெயர்ந்த எழுத்தாளர்கள் மத்தியில் இவருடைய எழுத்தின் முதிர்ச்சிக்குச் சான்றாக அமைகின்றன.
குதிரை இல்லாத ராஜகுமாரன் (சிறுகதைகள்)
ஆசிரியர் - ராஜாஜி ராஜகோபாலன்
வெளியீடு - சுதர்சன் புக்ஸ்

குதிரை இல்லாத ராஜகுமாரன் - மதிப்பீடுகள்

Sudarsan Books
September 24, 21015
குதிரை இல்லாத ராஜகுமாரன் (சிறுகதைகள்)
- ராஜாஜி ராஜகோபாலன்
எழுபதுகளிலான ஈழத்து எழுத்துலகப் பரப்பில் ஆழமாய்த் தடம் பதித்த படைப்பாளிகளில் ஒருவரான ராஜாஜி ராஜகோபாலன் அண்மைக் காலம்வரை எழுதியவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட பதினைந்து சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல்.
யாழ்ப்பாண மக்களின் வாழ்வியல் கோலங்களை அலாதியான வர்ணனைகளுடனும் நுட்பமான அவதானிப்புடனும் தனக்கேயுரிய தமிழ் நடையிலும் இடையிடையே எள்ளலும் காதலும் கனிவும் ததும்பும் சொற்சித்திரங்களுடனும் கதைமாந்தர்களின் உரையாடல்களில் இயல்பாகவே இடம்பெறும் பிரதேசப் பேச்சு வழக்கில் வாசகர் மனம் கட்டுண்டு வாசிப்புச் சுகத்தை முழுமையாய் நுகரும்படியாகவும் நுட்பமாய்க் கதையை நகர்த்திச் செல்லும் உத்தியில் ராஜாஜி கவர்ச்சியான தனது திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார்.
இந்த மண்ணின் பலவகையான களங்களிலும் வெவ்வேறு சூழல்களிலும் இவருக்கேயுரிய அதிசயிப்புடனான கண்ணோட்டத்திலும் மானுட நேசிப்பினூடான அணுகல் முறையிலும் கருக்கொண்ட இக்கதைகள் புலம்பெயர்ந்த எழுத்தாளர்கள் மத்தியில் இவருடைய எழுத்தின் முதிர்ச்சிக்குச் சான்றாக அமைகின்றன.
குதிரை இல்லாத ராஜகுமாரன் (சிறுகதைகள்)
ஆசிரியர் - ராஜாஜி ராஜகோபாலன்
வெளியீடு - சுதர்சன் புக்ஸ்

Jan 25, 2016

நிலபாவாடை

கந்தர் உடையார் தெரு சந்தியில்
பஸ்ஸூக்கு நின்றுகொண்டிருந்தேன்
அப்போது அந்த மரண ஊர்வலம் வந்துகொண்டிருந்தது.
இறந்துபோனவரைக் காவிக்கொண்டுவந்த
அந்த எட்டோ பத்துப் பேருக்கு முன்னால்
எங்களூர்ச் சலவைத் தொழிலாளர்கள்.
நிலபாவாடையை வீசி வீசி விரித்துக்கொண்டிருந்தார்கள்
அவர்களெல்லாரும் வயது வந்தவர்களாக இருந்தார்கள்
ஒருவன் மட்டுமே இளைஞனாயிருந்தான்.
அவனை நன்றாய் அவதானித்தபோதுதான்
என்னோடு கிளறிக்கல் சோதனைக்குப் படித்த நண்பன்
ஈஸ்வரன் என்பது தெரிந்தது.
அவன் சோதனை சித்தியடைந்து எங்கேயோ வேலையாயிருந்தான்
ஊருக்கு வரும்போது தகப்பனுக்கு உதவியாய்த்
தொழிலைச் செய்வான்போலும்.

ஈஸ்வரன் கையில் சுற்றிய சேலைகளோடு ஓடியபோது
ஒரு சுருள் எனக்குக் கிட்டே நிலத்தில் விழுந்தது.
அதையெடுத்து அவனிடம் கொடுத்தபோதுதான்
அவனும் என்னைக் கண்டான்.
ஒரு விநாடி என்னை உற்று நோக்கிவிட்டு
கொடுத்ததை வாங்கியபடி ஓடிப்போனான்.
என்னைத் தெரிந்துகொண்டதாக ஏன் அவன் காட்டிக்கொள்ளவில்லை?
எனக்கு மனதை என்னவோ செய்தது.
இன்னொருமுறை எனக்குக் கிட்டே வரமாட்டானாவென்று காத்திருந்தேன்.
அதற்குள் ஊர்வலம் எட்டச் சென்றுவிட்டது.
ஈஸ்வரனை அதற்குப் பிறகு சந்திக்கவேயில்லை.
நான் கிளறிக்கல் சோதனையில் தோற்றுப்போனதை அறிந்திருப்பான்.
நண்பனே, அதற்காகவா உன் வருத்தத்தை இப்படித் தெரிவித்துக்கொண்டாய்?
----